Skip to main content

பெரியார் சிலை உடைப்பு விவகாரம்... பாமக நிர்வாகி அதிரடி கைது...!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

 

periyar statue issue

 

 

இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. அது மட்டும் இல்லாமல் பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்பும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் ரஜினி பேசியதாக பல காவல்நிலையங்களில் ரஜினி மீது வழக்கும் தொடரப்பட்டன. பெரியார் ஆதரவாளர்கள் ரஜினிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில் ரஜினிக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

 

periyar statue issue

 



இந்த பிரச்சனை தமிழகத்தில் புகைந்து கொண்டிருக்க, செங்கல்படு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டையில் ஜனவரி 24 ஆம் தேதி பெரியார் சிலை  உடைக்கப்பட்டது. இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவரும்நிலையில், களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்