Skip to main content

ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக் குழுவில் விதிமீறல்... உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

OBC reservation committee ... DMK case in High Court

 

ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை எனத் தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக தி.மு.கவின் எம்.பி, டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்த இந்த அவமதிப்பு வழக்கு, விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  அந்த மனுவில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவச் சேவைகள் இயக்குநரை சேர்க்காமல் குழு அமைத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மத்திய, மாநில அரசுகள் மீறியுள்ளதாகவும் தி.மு.க குற்றஞ்சாட்டியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்