A case has been filed against Union Home Minister Amit Shah!

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம், பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Advertisment

மேலும், இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர். புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், தெலுங்கானா மாநிலத்தில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.