Skip to main content

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

kl;

 

நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் எந்த காரணம் கொண்டு அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

நியூட்ரினோ விவகாரம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் ஒருபோதும் நியூட்ரினோ திட்டம் தொடங்க அனுமதி வழங்கப்படாது. இந்த திட்டத்தைக் காட்டிலும் வன உயிரினங்களும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் , " கடந்த பத்தாண்டுகளாக மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் ட்வீட் செய்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்த திட்டத்தால் மக்களின் நீராதாரமே பாதிக்கப்படும்''-மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

 '' People's water source will be affected by this project '' - Trichy Siva speaks in the Lok Sabha!

 

தேனியில் நிறுவப்பட இருக்கும் நியூட்ரினோ ஆய்வக திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14/03/2022 அன்று  கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

 

அந்தக் கடிதத்தில், "தேனி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்துக்காக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் பாறைகளைத் தகர்ப்பது பேரழிவை ஏற்படுத்தும். நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவா பேசினார். ''சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மலைக்கு அடியில் சுரங்கம் தோண்டுவதால் அப்பகுதிகளில் பாறையில் வெடிப்பை ஏற்படுத்தும். இதனால் அப்பகுதி மக்களின் நீராதாரம் பாதிக்கப்படும்'' என பேசினார்.  

 

 

 

 

Next Story

நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Tamil Nadu Chief Minister's letter to the Prime Minister to abandon the neutrino project!

 

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்தக் கடிதத்தில், "தேனி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்துக்காக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் பாறைகளைத் தகர்ப்பது பேரழிவை ஏற்படுத்தும். புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும். நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.