Skip to main content

தோப்புத்துறை பெருநாள் கொண்டாட்டம்... எம்.எஸ்.ஃஎப் சார்பில் மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Eid Celebration ... Sapling Nut Celebration on behalf of MSF!

 

இன்று தோப்புத்துறையில் ஈகைத் திருநாள் உற்சாகமாக  கொண்டாடப்பட்டது. நேற்று JAQH சார்பில் மர்கஸ் திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டிருந்தது. கணிசமானோர் அதில் பங்கேற்றிருந்தனர்.

 

இந்நிலையில் இன்று ஜாமியா பெரிய பள்ளியில் சுமார்  1000 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர். சின்னப் பள்ளிவாசல், மலாக்கா பள்ளிவாசல், லெப்பை அப்பா பள்ளிவாசல் ஆகியவற்றில் பெண்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழுதனர். கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈதுல் பித்ர் தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடைபெறாத நிலையில், இவ்வாண்டு மக்கள் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கூடி ஒருவரையொருவர் ஆரத் தழுவிய உற்சாகமான சூழல் நிலவியது. இன்று கடும் வெயில் காரணமாக எல்லோரும் தொழுததும் அவரவர் வீடுகளுக்கு மக்கள் விரைந்தனர். முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் பெருநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. முதல் மரக்கன்றை  எம்.எஸ்.ஃஎப் நிறுவனர்களில் ஒருவரான மு.தமிமுன் அன்சாரி  ஊன்றினார்.

 

Eid Celebration ... Sapling Nut Celebration on behalf of MSF!

 

பல இளைஞர்கள் அவரவர் தெருவில் கூடி நின்று குரூப் போட்டோ எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலர் தங்கள் சகோதர சமுதாய நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துணவுகளை அனுப்பி வைப்பதும், அவர்கள் வருகை தந்து வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளும் வழக்கம் போல நிகழ்ந்தது. வீட்டு வாசலில் தர்மம் தேடி வந்தவர்கள் மாலை 4 மணி வரை வீதிகளில் வந்த வண்ணம் இருந்தனர்.

 

மாலை 5 மணிக்கு படே சாஹிப் மைதானத்தில் பெருநாள் சந்தை இருந்ததால் பெண்கள் கூட்டம் அங்கும் அலைமோதியது. வெயில் கடுமை காரணமாக மாலை 7 மணிக்கு பிறகே மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.