Skip to main content

கறிக்கடையில் பறிமுதல் செய்யப்பட்ட கறியை கூறுபோட்டு கொண்ட காக்கிகள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனாவிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க காலையில் மட்டும் வெளியே போய் வருகிறார்கள். இப்படி போக கூடிய மக்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள கறிக்கடை கோழி கடைகளுக்கு சென்று கறிகளையும் வாங்கி வருகிறார்கள். இப்படி கறிகளை வாங்க செல்லும் மக்கள் இடைவெளிவிட்டு நிற்காமல் கூட்டமாக கடைகளில் நிற்பதால் அதன் மூலமும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கருதிய தமிழக அரசு திடீரென கறிகடைகளை இழுத்து மூடச் சொல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

  dindigul



 
அதன் அடிப்படையில்தான் கடந்த ஐந்தாம் தேதி தமிழகத்தில் அனைத்து கடைகளும் இழுத்து மூடப்பட்டாலும் கூட, அங்கங்கே கறிக்கடைகள் விற்பனை செய்தும் வந்தனர். அதுபோல்தான்  திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அரசு உத்தரவின்படி இழுத்து மூடப்பட்டது. ஆனால் சிலர் ஆங்காங்கே கறிக்கடைகளை உள்புறமாக பூட்டி வைத்துக் கொண்டு மறைமுகமாக பொதுமக்களுக்கு ஆட்டு கறிகளை ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரைக்கும் கொடுத்து வந்தனர். அதுபோல் கோழிக்கறியும் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சிறுமலை அடிவாரத்தில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வந்த அபுதாகிர் என்பவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்டுக்கறி கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சாணார்பட்டியில் உள்ள தனது வீட்டில் ஒரு கிலோ, இரண்டு  கிலோ என பொட்டலம் போட்டு கொடுக்க வைத்து இருந்தார்.
 

nakkheeran app



இந்த விஷயம் தாலுகா டி.எஸ்.பி.  வினோத்துக்கு தெரியவே உடனே காக்கிகளுடன் ஸ்பாட் விசிட் அடித்து கறிக்கடை உரிமையாளரான அபுதாகிரையும் கூப்பிட்டு கொண்டு வீட்டில் வாடிக்கையாளர்களுக்காக  கொடுக்க வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரம் ரூபாய் பெருமான ஆட்டுக்கறியையும் பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதனடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள போலீசாரும் கடை உரிமையாளரான அபுதாகிர் மேல் வழக்குப் பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை ஏதாவது ஒரு இடத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.  ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காக்கிகளோ அந்த ஆட்டு கறியை ஆளுக்கு ஒரு கிலோ இரண்டு கிலோ என கூறு போட்டு கொண்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். அதை கேள்விப்பட்டு கறிக்கடை உரிமையாளரும் மனம் நொந்து போய்விட்டார். இந்த விஷயம் காக்கிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Chief Minister M.K. Stalin's campaign In Theni

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில  நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.