Skip to main content

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கரோனா தொற்று உறுதி!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020
பர

 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 5 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியா முழுவதும் அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்