Skip to main content

கைதிகள் மீது கை வைக்காதீங்க! ஐ.ஜி. பெரியய்யா அட்வைஸ்!!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

IG Periyayya

 

குற்றவாளிகளை கைது செய்யும்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதுடன், கைதிகளைத் தாக்காமல் விசாரணை நடத்திட வேண்டும் என மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தினார். இது, அவ்வப்போது துறை ரீதியாக நடக்கும் வழக்கமான ஆலோசனை, ஆய்வுக் கூட்டம்தான் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.


சேலம் மாவட்டம் ஓமலூரில் ஜூலை 7ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுடன் ஐ.ஜி. பெரியய்யா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

 

''தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் ஒவ்வொரு காவலரும் கடமை உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். மக்களிடம் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைத்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் அப்பெயரை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. அதனால் கரோனா தடுப்புப் பணிகளில் முழு கவனத்துடன் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். 


ஒவ்வொரு காவலரும் டென்ஷன் இன்றி, மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். சாலையில் வாகனத் தணிக்கை உள்ளிட்ட களப் பணியாற்றும்போது எவ்வித டென்ஷனையும் வாகன ஓட்டிகளிடம் காட்டக் கூடாது. பொறுமையாக விசாரித்து அனுப்பிட வேண்டும்.


கரோனா பரவும் இப்போதைய சூழலில் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகிறோம். அனைவருக்கும் நாம்தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவலர்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து, அதனைச் சரி செய்திட வேண்டும். 


குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் கேட்டுத் தீர்வு கண்டு துணையாக இருக்க வேண்டும். அதேபோல் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கைதிகளை எக்காரணம் கொண்டும் தாக்காமல் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் வராமல் பணியாற்றி, காவல்துறைக்கு நற்பெயரை பெற்றிட வேண்டும்'', என்றார் ஐஜி பெரியய்யா.

 

http://onelink.to/nknapp


சேலம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர், கூடுதல் எஸ்.பி.-க்கள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் அனைத்து டி.எஸ்.பி.-க்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.