Skip to main content

தொழிற்சாலைகளில் பிரச்சாரம் - திமுகவின் கள வியூகங்களால் தடுமாறும் ஏ.சி.சண்முகம்.

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

வேலூர் மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் வேலூரில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்காக, தமிழக அமைச்சரவையோடு சேர்த்து 209 தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதியில் உள்ளனர்.

 

vellore lok sabha election campaign dmk and admk parties

 

 


வேலூர் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்தே வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டையை சேர்ந்த முகமதுஜான்னை மாநிலங்களவை எம்.பியாக்கியது அதிமுக. அவரும், தன் சமுதாய மக்களிடம், தொழிலபதிர்களிடம், ஜமாத் நிர்வாகிகளை தனித்தனியாக, குழுவாக சந்தித்து இஸ்லாமிய மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்.


அதிமுகவை தொடர்ந்து இஸ்லாமிய வாக்குகளை பெற திமுகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்ட மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகன் ஆரம்பம் முதலே இஸ்லாமிய முக்கிய பிரமுர்களை சந்தித்த படியே இருந்தார். ஆம்பூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 

 

vellore lok sabha election campaign dmk and admk parties




ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பெரியதும், பிரபலமானதுமான பரிதாபாத் தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளனர். இந்த குழும நிறுவனத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பெரும்பான்மையாக இந்து மதத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூரில் உள்ள பரிதாபாத் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 1- ஆம் தேதி காலை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து திமுகவுக்கு வாக்களியுங்கள் எனக்கேட்டு வாக்கு சேகரித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.