Skip to main content

மனைவியை எரித்துக் கொன்ற கணவன்... மனநிலை பாதிக்கப்பட்டவரா போலீஸ் விசாரணை

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பக்கமுள்ள சின்னத்தம்பி நாடார் பட்டியைச் சேர்ந்தவர் அணைந்த பெருமாள் (55) இவரது மனைவி பன்னீர் செல்வம் (50) கணவர் விவசாய கூலி வேலை பார்ப்பவர் மனைவி பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு மணமாகி சுமார் 35 வருடங்களாகிறது. கனகராஜ் (30) திருமலைச்செல்வன் (28) என இரண்டு மகன்கள் விதியின் கோலம் பிறந்தது முதலே இந்த இரு மகன்களும் மாற்றுத் திறவாளிகள். பிறருடைய உதவியின்றி, இவர்களால் அசைய முடியாது.

 

incident in thenkasi


இந்தக் இக்கட்டான குடும்ப நெருக்கடியை எவ்வளவோ சமாளிக்க முயன்றிருக்கிறார் அணைந்த பெருமாள். அவரால் முடியவில்லை. மோலும் இது குறித்து தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்த அணைந்த பெருமாள் கடந்த இரண்டு வருடங்களாகவே மன உளைச்சலால் மன நிலை பாதிக்கப்பட்டுமிருந்தார். வேலைக்கும் சரியாகச் செல்லவில்லையாம்.

 

incident in thenkasi


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் மனைவி பன்னீர் செல்வத்திடம், இப்படி மாற்றுத் திறனாளிப் புள்ளைகள் பிறந்ததற்கு நீ தான காரணம் என்று கூறி தகராறு செய்திருக்கிறார். அடுத்த நொடி வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மண்ணெணையை எடுத்து பன்னீர் செல்வம் உடலில் மீது ஊற்றித் தீ வைத்திருக்கிறாராம். இதில் அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்து தீக்காயமடைய அவர் அலறியதோடு கணவரை இழுத்திருக்கிறார். இதில் அவரது நெஞ்சு வயிற்றுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில், நேற்று பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

incident in thenkasi


இது தொடர்பாக பாவூர்சத்திரம் எஸ்.ஐ. சின்னத்துரை விசாரணை நடத்தி அணைந்த பெருமாள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பரபரப்பு சூட்டைக் கிளப்பிய இந்தக் கோரச்சம்பவம் காரணமாக ஆதரவற்றவர்களாகிப் போன முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இரண்டு மகன்களின் நிலை தான் பரிதாபம்.
          

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.