Skip to main content

அரியலூர் - அனைத்து அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் வைக்க - பழ-நெடுமாறன் கோரிக்கை

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
அரியலூர் - அனைத்து அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் வைக்க - பழ-நெடுமாறன் கோரிக்கை



அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழர் தேசிய முன்னனி தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலக பொதுமறையாக உள்ளது. 

இவ்வாறு சிறப்பு மிக்க திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களில் படங்கள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எஸ். பி. சேகர்

சார்ந்த செய்திகள்