Skip to main content

பணிமனைக்குள் மது; பேருந்து மோதி காவலாளி உயிரிழப்பு

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Alcohol in the workplace; Guard in bus collision

 

சென்னை குன்றத்தூர் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் போதையில் பேருந்தை இயக்கியதால் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துப் பணிமனைக்குள் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்தக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், சென்னை குன்றத்தூர் போக்குவரத்துப் பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பாலசுப்பிரமணியன் இருவரும் மது அருந்தியதாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாலசுப்பிரமணியம்  குடிபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் பணிமனையின் காவலாளி வேலுச்சாமி என்பவர் பேருந்து மோதி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்