Skip to main content

பெண் தாதாவின் சாராயக் கும்பல் வாஷ் அவுட்... நிம்மதி பெருமூச்சு விட்ட வாணியம்பாடி!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

கடந்த 27 ஆண்டுளாக பாக்கெட் சாராயம் விற்று வந்த பெண் தாதாவை கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 1990-களிலேயே சாராய விற்பனையில் இறங்கியவர் மகேஸ்வரி. இதுவரை சுமார் 80 மேற்பட்ட வழக்குகள், அதிலும் 7 முறை குண்டர் சட்டம் என பெண் தாதாவாகவே அறியப்பட்டார் மகேஸ்வரி. சட்டவிரோதமாக மகேஸ்வரி விற்கும் பாக்கெட் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு தகவலளிப்பவர்கள் மீது தாக்குதல் மட்டுமில்லாது கொலை வரை செல்லும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து அடிக்கடி வணியம்பாடியை பரபரப்பாக்கும். சில தினங்களுக்கு முன்பு திருவிழாவில் கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது புகாரளித்த இளைஞர்கள் சிலர் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை கண்டித்து நேதாஜி நகர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப்பகுதி இளைஞர்கள் மகேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இளைஞர்கள் கைப்பற்றிய சாராய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற நிலையில், மகேஸ்வரி மற்றும் அவரது கும்பலை கைது செய்தால்தான் மூட்டைகளை தருவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து அதிக எதிர்ப்புகள், போராட்டங்கள் எழுந்த நிலையில் மகேஸ்வரியை கைது செய்ய திட்டமிட்ட போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டனர்.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு விசாரணையில் தகவல் வர, அங்கு சென்ற போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மகேஸ்வரியின் அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது  இந்த கும்பலின் கைது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.