Skip to main content

மாணவியை கடத்தி திருமணம்; வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

12 student marriage youth arrested salem police

 

சேலம் அருகே பிளஸ்2 மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அரசுப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த அந்த மாணவி, பொதுத்தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார். 

 

இவரை ஜூன் 8- ஆம் தேதி, ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கடத்தூர் மோளையன் தெருவைச் சேர்ந்த மயில்சாமி (வயது 30) என்பவர், திருமண ஆசை காட்டி, கடத்திச்சென்று விட்டார். அவர், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். 

 

மாணவியின் பெற்றோர் இதுகுறித்து மல்லூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்சவள்ளி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை கடத்திச்சென்ற மயில்சாமி, சேலத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதும், உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. 

 

இதையடுத்து மாணவி தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாததால், மயில்சாமி மீது குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின் கீழும், போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 

 

அவரை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவ்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.