Skip to main content

“அவர் அலங்காரமாக இருந்தாலும் காலையில் தயிர் சாதம் தான் சாப்பிடுகிறார்” - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

lord venkateshwara only eats curd rice in the morning – Tamilisai Soundarrajan

 

தெலங்கானா மாநில ஆளுநர் ஸ்ரீமதி தமிழிசை சவுந்தரராஜன் சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேசபெருமானை தரிசனம் செய்தார். இதன் பின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “முக்கியமான நபர்கள் காலை 10 மணிக்கு வந்து 11 மணிக்குச் செல்வது நல்ல ஏற்பாடு எனவே நிர்வாகத்தை மிகவும் பாராட்டுகிறேன். இரவு முழுதும் மக்கள் காத்திருந்து கடவுளைத் தரிசிக்கும் சூழல் மாறி விடியற் காலையிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இறைவனும் மகிழ்ச்சியாக உள்ளார்.

 

எளியோரைக் காண்பது தானே வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மகிழ்ச்சி. அவர் எவ்வளவு தான் அலங்காரமாக இருந்தாலும் காலையில் எளிமையான தயிர் சாதத்தைத்தானே சாப்பிடுகிறார். மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.

 

அதே போல் நேற்று தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூக்கு வழியாகச் செயல்படும் சொட்டு மருந்தை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது நமக்குப் பெருமை. ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்கும் பொழுது பல கட்சிகள் மத்திய அரசின் மீது விமர்சனம் வைத்தனர். தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிதான் காரணம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.