Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்தால் என்ன நடக்கும்?

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

கர்நாடக சட்டசபை இன்று காலை கூடி, எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் போபையா எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

 

un

 

கர்நாடக சட்டசபையில் ஆட்சி மாற்றம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு. பல்வேறு ட்விஸ்டுகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், யாருக்கும் வாக்களிக்காமல், அல்லது எதிரணிக்கு வாக்களித்தல் போன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ், ம.த.ஜ. எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டால் அது பா.ஜ.க.வுக்கு சார்பாகவே முடிவடையும். ஆனால், அப்படி மாற்றி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். அதேபோல், கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

 

இந்நிலையில், இதைத் தடுப்பதற்காக காங்கிரஸ் விப் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதன்படி, சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்துகொண்டு, எடியூரப்பாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களான பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஆனந்த் சிங் ஆகியோர் இன்னமும் சட்டசபைக்கு வராத நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு; அதிரடி சட்டம் நிறைவேற்றம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Implementation of Action Act for New regulation of cigarette sales in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாத பொருளாக மாறி வருகிறது. 

அதே சமயம், கர்நாடகா மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து, சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்தும் கர்நாடகா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவை, நேற்று (21-02-24) கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன் பின் அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறினால் ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நடமாடும் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹூக்கா’ பார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திருத்த மசோதா, கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

Next Story

பாலியல் வன்கொடுமை பேச்சு: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு கண்டனம் தெரிவித்த ஜோதிமணி எம்.பி.!

Published on 17/12/2021 | Edited on 18/12/2021

 

karnataka assembly mla speech congress leader jothimani mp

 

கர்நாடக சட்டப்பேரவையில் மழை தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் பேச வேண்டும் என்று கோஷம் போட்டனர். அப்போது சபாநாயகர் அனைவரையும் அமரும்படி கேட்டுக்கொண்டார். இருந்தும் விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடுதல் நேரம் வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். இதனால் பொறுமையிழந்த சபாநாயகர், "அனைவரும் மகிழ்ச்சி அடையுங்கள், அனைத்திற்கும் ஆமாம் போடும் நிலைக்குத் தற்போது நான் வந்துவிட்டேன், நீங்கள் தொடர்ந்து கூச்சலிடுங்கள்" என்று கோவமாக கூறினார். 

 

இதைக் கேட்ட முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ரமேஷ்குமார், "பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க முடியாதபோது அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதுபோலத்தான் உங்கள் நிலைமையும் உள்ளது" என்றார். இதுவாவது பரவாயில்லை, கே.ஆர்.ரமேஷ்குமாரை தூக்கிச் சாப்பிடும் விதமாத சபாநாயர், "இது உங்களின் சொந்த அனுபவம் போல்" எனக் கூறி அவைக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

 

இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் பிரதிநிதிகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து, இவ்வளவு மோசமாக பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரின் பாலியல் வன்கொடுமை குறித்த பேச்சு, அதைக் கேட்டு இன்றைய சபாநாயகர் சிரிப்பது இரண்டும் கடுமையான கண்டனத்திற்குரியது.

 

காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் கண்டித்தே வந்திருக்கிறது. இப்பொழுதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் பாலியல் வன்கொடுமை தொடர்பான கருத்தைக் கண்டித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ரமேஷ் குமார் இன்றைய (17/12/2021) சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.