Skip to main content

முடிவடைந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

The Erode East by-elections are over

 

தமிழகமே உற்று நோக்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்களில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். 

 

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் மொத்தம் உள்ள 238 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்களும் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

 

இந்நிலையில் மாலை 6 மணியளவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் டோக்கன்களைப் பெற்று வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வாக்களிக்க யாரும் இல்லாத நிலையில் வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னனு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்