இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் 2 நாள் இலங்கை பயணம்
இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக அங்கு செல்கிறார்.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் 35 நாடுகள் பங்கேற்கின்றன.