Skip to main content

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்று வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகை வரலட்சுமி நடத்தி வரும் சேவ் சக்தி ஃபவுண்டேஷன் மூலமாக பலருக்கு உதவி வருகிறார். அதே போல் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2,000 புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக் கவசம் மற்றும் மருத்துவப் பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்