நான் எப்போது வீடு கட்டி சந்தோஷமாக வாழ்வேன் என்று கூறுங்கள். -முருகன், கோவை.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சொந்த வீடு யோகத்திற்கு காரகத்துவம் வைக்கக்கூடிய பாவமான 4-ஆம் அதிபதி சூரியன் 8-ல் மறைந்து ராகு சேர்க்கைப்பெற்றிருப்பது அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. உங்கள் ஜாதகத்தில் 7-ல் சுக்கிரன் வலுவாக இருப்பதாலும், 7-ஆம் அதிபதி 10-ல் பலமாக இருப்பதாலும் நீங்கள் தனியாக முயற்சி செய்யாமல் கூட்டாக முயற்சிசெய்தால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 4-ஆம் வீட்டில் கேது இருப்பதால் உங்கள் பெயரில் சொத்து அமைய இடையூறுகள் ஏற்படும். கூட்டாக முயற்சி செய்தால் விரைவில் ஒரு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. முருக வழிபாடு மேற்கொள்ளவும்.
என் திருமணம் எப்போது நடைபெறும்? -சற்குருநாதன், விழுப்புரம்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைந்தாலும் பாவகரீதியாக 7-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். உங்களுக்கு களத்திரகாரகனாகிய சுக்கிரன் 10-ஆம் வீட்டிலிருப்பது ஒரு சிறப்பான மணவாழ்க்கையை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தற்போது சனி தசையில் புதன் புக்தி நடப்பதால் வரும் மே ஒன்றுக்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும் சனி பார்வை சுக்கிரனுக்கு இருப்பதாலும் திருமணம் தாமதமாகி கொண்டிருக்கிறது. காலபைரவரையும், முருகரையும் வழிபாடு செய்யவும்; விரைவில் நல்லது நடக்கும்.
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? எப்போது பிறக்கும்? அல்லது குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா? தோஷம் ஏதேனும் இருப்பின் பரிகாரம் கூறவும்.
பதில்: உங்கள் மகன் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி செவ்வாய்- ராகு நட்சத்திரத்தில் இருப்பதும், புத்திரகாரகன் குரு 12-ல் சனி நட்சத்திரத்தில் அமையப்பெற்று குருவுக்கு அடுத்து கேது இருப்பதால் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறு கள் ஏற்படுகிறது. அதுபோல மருமகள் ஜாதகத்தில் புத்திர காரகன் குரு வக்ரகதியில் அமையப்பெற்று 5-ஆம் அதிபதி புதன்- கேது சேர்க்கைப்பெற்று இருப்பதும் பெண்களுக்கு முக்கிய கிரகமான செவ்வாய் நீசம் பெற்றிருப்பதும் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறுகள் ஏற்படுகிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும். இருவர் ஜாதகத்திலும் குருபகவான் சற்று பலவீனமாக இருப்பதால் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? தோஷம் ஏதேனும் இருப்பின் பரிகாரம் கூறவும். -சுந்தரி, திருநெல்வேலி.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி நீசமாகி 6-ல் இருப்பது திருமண தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜாதகத்தில் சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெற்றுவிட்டது சாதக மற்ற அமைப்பாகும். தற்போது ராகு தசையில் சனி புக்தி நடப்பதும் ஒருவருக்கொருவர் சஷ்டாஷமாக இருப்ப தும் நல்ல அமைப்பு இல்லை. தந்தைவழி பித்ரு தோஷம் பூர்வீக வழியில் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. 2025 அக்டோபருக்கு பிறகு நடக்க இருக்கக்கூடிய 7-ஆம் அதிபதி சுக்கிர நட்சத்திரத்தில் அமையப்பெற்ற புதன் புக்தி காலத்தில் திருமணம் அமையும். உறவில் பார்ப்பது நல்லதல்ல. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
என் மகன் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 5-ல் ஆட்சி பெற்றிருப்பதால் எதிர்காலத்தில் ஒரு வளமான நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மீன ராசியில் அமையப்பெற்ற ராகு தசை எதிர்காலத்தில் நடக்க இருப்பதால் வெளியூர் வாய்ப்பு, வெளிநாடு வாய்ப்புகள் ஏற்பட்டு ஒரு கௌரவமான நிலை உண்டாகும். ராகு தசை காலத்தில் வெளிநாடுமூலமாக அனுகூலங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? -பிரியா, பாண்டிச்சேரி.
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 6-ல் மறைந்திருப்பதால் திருமணம் தாமதம் ஆகிறது. அது மட்டுமில்லாமல் சந்திரன்- சனி சேர்க்கைப்பெற்று புணர்பூ தோஷம் இருப்பதாலும் தற்போது சந்திர தசையில் சனி புக்தி 11-5-2024 முடிய நடப்பதாலும் நல்ல காரியம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. அடுத்து வரக்கூடிய புதன் புக்தியில் நல்ல காரியம் நடக்கும். 7-ஆம் அதிபதி சூரியன் சனி நட்சத்திரத்தில் இருப்பதாலும் சந்திரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் 7-ல் கேது இருப்பதாலும் சொந்தத்தில் வரன் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது ஒரு வளமான பலன்களை ஏற்படுத்தும்.