ருகாலத்தில் தரித்திரம் பிடித்த தொழில் என விமர்சிக்கப்பட்ட தொழிலான ஜோதிடம் இன்று பட்டி தொட்டி எல்லாம் வெகுவாக பரவி வருகிறது. ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்தில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டாலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை என்றாலும் பித்ரு தோஷம் என்றோ, ஏழரை, அஷ்டமச் பாதிப்பு என்று மட்டுமே பலன் கூறப்பட்டது. அதிகபட்ச தீர்வாக குலதெய்வ வழிபாடு, பித்ருக்கள் பூஜை மட்டுமே பரிகாரமாக கூறப்பட்டது.

ஜோதிடம் தற்போது வளர்ந்துவிட்ட நிலையில் ஒருவருக்கு நிலையான வருமானம் இல்லை என்றால் தன, லாப ஸ்தானம் வலிமை இல்லை என்று பாமரனும் பலன் சொல்லுவான். ஒரு ஆணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால் 7-ஆம் பாவக அதிபதியையும், சுக்கிரனையும் வலிமை படுத்தவேண்டும் என்ற புரிதல் வந்துவிட்டது.

ஜோதிடம் பார்க்கவரும் ஒரு நபர் ஜோதிடருக்கே ஜாதகப் பலன் கூறும் வகையில் ஜோதிடம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் பித்ரு தோஷம், ஏழரை அஷ்டமச் சனி என்ற கூற்று உண்மையா என்ற எண்ணம் தோன்றுமல்லவா?

என்னிடம் ஜோதிடம் பார்க்கவரும் நபர்களிடம் பெரும்பான்மையாக ஏழரை, அஷ்டமச் சனி, பித்ரு தோஷம் பற்றி பேசுவதும் கிடையாது. அது என்னை சந்தித்தவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படியென்றால் இந்த கட்டுரையில் ஏன் பித்ருதோஷம் என்ற ஒரு கருத்திற்கு முக்கியத் துவம் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை வாசகர்கள் என்னிடம் கேட்பது எனக்கு கேட்கிறது. ஆண்டிமுதல் அரசன்வரை அனைவருக்கும் பித்ரு தோஷம் உண்டு. அது வெளிப்படும் காலம் மாறுபடும். சில கிரகங்களுக்கு சில பாவகங்களின் சம்பந்தம் இருந்தால் மட்டுமே பித்ரு தோஷம் தலைவிரித்தாடும். மற்றபடி பெரிய தொந்தரவு தராது. அதேபோல் பித்ரு தோஷத்திற்கு ஏழரை அஷ்டமச் சனிக்கும் சம்பந்தம் உண்டு. என்ன குழப்பம் அதிகமாகுகிறதா? தெளிவாக விளக்குகிறேன். நிதானமாக மீண்டும் மீண்டும் படிக்கவும்.

Advertisment

சனிபகவான்

ஜோதிடத்தில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேது ஆகியோர்களின் செயல்பாடே தசா புக்திக்கு ஏற்ப ஒரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்ற- இறக் கத்தை மிகுதிப்படுத்துகிறது.

சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத் தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது . ராசிச் சக்கரத்தை ஒரு சுற்று சுற்றிவர தோராய மாக 30 ஆண்டுகள் ஆகின்றது. அதனால் பெரியவர்கள் பேச்சுவழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடம் தாழ்ந்த வரும் இல்லை என்பார்கள். அதாவது 30 வருடம் எந்த துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதரும் இல்லை. 30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குறைந்தபட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால் 30 வருடகாலம் சனிபகவானின் பிடியில் மட்டுமே மனிதர் களின் வாழ்க்கை இருக்கும்.

Advertisment

ஏழரைச்சனி - 7 1/2 ஆண்டுகள்

அஷ்டமச்சனி - 2 1/2 ஆண்டுகள்

அர்தாஷ்டமச்சனி - 2 1/2 ஆண்டுகள்

கண்டச்சனி - 2 1/2 ஆண்டுகள்

--------------------

மொத்தம் - 15 ஆண்டுகள்.

------------------

சனிபகவான் ராசிக் கட்டத்தை ஒருமுறை வலம்வரும் 30 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சனியின் பிடியில் இருந்தால் சராசரி ஆயுள் காலமான 60 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் (2 சுற்றுக்கு) மனித வாழ்வில் கர்ம வினைக்கு ஏற்ப ஏற்ற- இறக்கத்தைத் தந்து வாழ்வின் தத்துவத்தை புரியவைப்பார்.

சனியின் பணியாட்கள் ராகு- கேதுகள். சனிபகவானின் கட்டளைக்கு ஏற்ப தங்களின் பணிகளை கோட்சாரம் மற்றும் தசா புக்திகள்மூலம் நிகழ்த்துபவர்களே ராகு- கேதுகள். சனி, ராகு- கேதுகளால் ஏற்படும் ரண சிகிச்சைக்கு மருந்து போடுபவர் குருபகவான். இதுதான் வருட கிரகங்களின் செயல்பாடுகள்.

பித்ரு தோஷம்

ஒரு ஜாதகத்தில் சூரியன் பிதுர்காரகன், சந்திரன் மாதுர்காரகன். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் எனும் பாக்கிய ஸ்தானம் முன்னோர்கள் செய்த நல்வினை, தீவினைப் பயனை குறிக்குமிடம். இந்த ஒன்பதாம் பாவகத் தில் சனி, ராகு- கேது மற்றும் ஒன்பதாம் அதிபதி நீசம், ஒன்பதாம் அதிபதியுடன் ராகு- கேதுகள் மிக நெருக்கமாக இணைந்து பலமிழக்க வைத்திருப்பது, ஒன்பதாம் அதிபதி பாவ கர்த்தாரி தோஷத்தில் இருப்பது, பித்ரு காரகனாகிய சூரியன் ராகு- கேது சனியுடன் சேர்ந்திருப்பது, அதுபோல், மாத்ருகாரகன் எனப்படும் சந்திரன் ராகு- கேது, சனியுடன் சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல், ராகு- கேதுகள் சூரியன், சந்திரனுடன் நெருக்கமான இணைவில், கிரகண தோஷத்தில் இருந்தால், கடுமையான பித்ரு, மாத்ரு தோஷம் உண்டு. சூரியன், சந்திரனுக்கு சனி சம்பந்தம் இருப்பதும் சூரியன், சந்திரன், சனி, ராகு- கேதுவின் நட்சத்திரத்தை பெறுவதும் பித்ரு தோஷமாகும். ஒன்பதாம் பாவகத்தில் சூரியன், சந்திரன் உடன் சனி அல்லது ராகு- கேதுகள் இணைந்தால், கடுமையான பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷமாகும்.

ss

மேலே கூறிய அனைத்தும் எத்தனை டிகிரியில், சூரியன் சந்திரனோடு பாவ கிரகங்களான, சனி, ராகு- கேது இணைந்து உள்ளன என்பதை பொறுத்து தோஷத்தின் வீரியம் மாறுபடும். பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷம் இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற ஜாதகர்கள், வாழ்க்கையில் நல்லது நடக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

சனிபகவான் கர்மவினைக்கும், முன்னோர் களுக்கும் காரக கிரகம். அதனால்தான் ஒருவரின் வாழ்க்கைப் பயணம் சுய ஜாதகத் தில் சனிபகவான் நின்ற நிலைக்கு ஏற்ப அமைகிறது. சுய ஜாதகத்தில் முன்னோர் களுக்கும், கர்மவினைக்கும் காரக கிரகமான சனிக்கு அஷ்டம பாதக ஸ்தான அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் சாதகமற்ற தசை, புக்தி காலங்களில் குறிப்பாக ஏழரை, அஷ்டம சனி காலங்களில் அல்லது சனி தசை காலங்களில் கர்மவினைக்கு ஏற்ப பித்ரு தோஷம் வெளிப்படும். சுய ஜாதக சூரியன். சந்திரனை கோட்சார சனி, ராகு- கேதுகள் தொடர்புகொள்ளும் காலங்களில் பித்ரு தோஷம் தாக்கம் மிகுதியாக வெளிப்படும். இந்த வாசகத்தை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிக்கவும்.

இப்பொழுது 9-ஆம் அதிபதிக்கு அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் பித்ரு தோஷம் ஜாதகரை பாதிக்கும் என்றும் 9-ஆம் அதிபதிக்கு அஷ்டம பாதக ஸ்தானம் சம்பந்தம் பெறாத பித்ரு தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இதை ஒரு உதாரண ஜாதகத் துடன் பார்க்கலாம்.

13-7-1957 அன்று மாலை 4.35 பிறந்தது.

இந்த ஜாதகத்தில் வெளிப்படையாக பார்த்தால் பித்ரு தோஷம் தெரியாது.

முதல் முறையாக என் மூலம்தான் ஜாதகர் தனது பித்ரு தோஷ வலிமையை தெரிந்து கொண்டார்.

சூரியன், சந்திரனுக்கும் சனி. ராகு- கேதுவுடன் நேரடி சம்பந்தம் இல்லை. சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு, சந்திரனுக்கு சனி பார்வை என்பதால் பித்ரு தோஷம் உள்ளது என்று கூறலாம். 9-ஆம் அதிபதிக்கு அஷ்டமாதிபதி பாதகாதிபதி சம்பந்தமே பெரும்பான்மையாக பித்ரு தோஷ வலிமையை நிர்ணயிக்கிறது என்பதுதான் நமது பித்ரு தோஷத்தின் விதி. இந்த ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி சந்திரனும் 9-ஆம் பாவகமும் ராகு- கேதுவின் மையப்புள்ளியில் உள்ளது. 9-க்குடையவன் சந்திரனே பாதகாதிபதியாகி கர்ம காரகன் சனியின் 3-ஆம் பார்வையில் உள்ளது. மேலும் அஷ்டமாதி புதன் பாதக ஸ்தானத்தில் மாந்தியுடன் இணைந்து 9-ஆம் அதிபதி சந்திரனை பார்ப்பது கடுமையான பித்ரு தோஷமாகும்.

இந்த ஜாதகர் சனி தசையின் குரு புக்தியில் தனது 65 வயதில் 2022-ஆம் ஆண்டு விற்க முடியாத பூர்வீகச் சொத்து தொடர்பாகவும் 42 வயது மகள் 40 வயது மகனின் திருமணத்திற்காகவும் நம்மை தொடர்புகொண்டார். முதலில் இந்த பூர்வீகச் சொத்து உங்கள் தாத்தாவின் மூலம் கிடைத்த சொத்தா என்று கேட்டேன்.

ஜாதகர் ஆம் என்றார். நான் 9-ஆமிடத்திற்கு அஷ்டமாதிபதி பாதகாதிபதி சம்பந்தம் உள்ளது. 9-ஆமிடத்திற்கு மாந்தி சம்பந்தம் உள்ளது. 3-க்குடையவன் 9-க்குடைய வனை பார்க்கிறார். 3-ஆமிடம் டாக்கு மென்ட். 9-ஆமிடம் தந்தை, தந்தை வழி முன்னோர்களைப் பற்றிக் கூறுமிடம். 9-ஆமிடத்திற்கு அஷ்ட மாதிபதி சம்பந்தம் உள்ளது. இந்த சொத்தில் ஒருவரின் கோபமும் சாபமும் உள்ளது என்று கூறினேன்.

தனது சித்தப்பாவின் பங்கு சொத்து என்றும் அவருக்கு திருமணமாகியும் பிள்ளை இல்லை. ஆனால் சட்டத் திற்கு புறம்பான குடும்பம்மூலம் ஒரு ஆண், 1 பெண் பிள்ளைகள் உண்டு. குடும்ப சொத்து வெளியே சென்றுவிடும் என்ற பயத்தில் எனது தந்தையும் தாத்தாவும் சித்தப்பாவிற்கே தெரியாமல் என் தந்தையின் பெயரில் 60 வருடத் திற்குமுன்பே சொத்தை மாற்றி எழுதிய சொத்து என்று கூறினார்.

5-ஆமிடம் என்பது பூர்வீகம், 5-ஆமிடம் என்பது குழந்தை. அவரின் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி குரு 11-ல் 8-ல் நிற்கும் சூரியன் சாரம். சித்தப்பாவை குறிக்கும் 11-ஆமிட அதிபதி புதன் பாதக ஸ்தானத்தில் சனி சாரத்தில் மாந்தியுடன் பாதகாதிபதி சந்திரன் பார்வையில் உள்ளது. இந்த ஜாதகத்திற்கு எந்தவழியில் பலன் சொன்னாலும் நமது பித்ரு தோஷ விதியின் படி 9-ஆமிடம் 9-ஆம் அதிபதிக்கு அஷ்டம பாதக ஸ்தான சம்பந்தம் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஜாதகரின் சித்தப்பா இறந்தபிறகு கடந்த 40 வருடங்களாக சொத்தை தங்களால் விற்க முடியவில்லை என்று கூறினார்.

அதேபோல் ஜாதகருக்கு இந்த சொத்தை விற்றுதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அவரிடமுள்ள பல சொத்துகளில் இதுவும் ஒன்று. ஜாதகருக்கு இந்த சொத்தால்தான் தனது மகன், மகளுக்கு திருமணம் நடக்கவில்லையோ என்ற மன வருத்தமும், ஒரு பய உணர்வும் மனதிற்குள் இருந்துள்ளது.

பரிகாரம்

முதலில் ஜாதகரின் முன்னோர்களுக்கு பித்ரு தோஷத்தை நீக்க அறிவுறுத்தப்பட்டது. முன்னோர்களுக்கு முக்தியளிக்கும் பரிகாரத் தலங்களில் மோட்ச தீபமேற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படுவது திருப்புவனம்.

இறைவன் பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர் இறைவி பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி மதுரை- மானாமதுரை சாலை வழித் தடத்தில், மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை- மானா மதுரை ரயில் பாதையில் இருக்கிறது.

மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள்கொண்ட திருவாச்சி தீபமும் இடம்பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்திபெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதேனும் பாவங்கள் செய்யாமல் இருக்கமாட்டர்கள். அவ்வாறு செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவ னம் தலத்தில் மோட்ச தீபமேற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர் களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஜாதகரை மாதம் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று மோட்ச தீபமேற்ற அறிவுறுத்தப்பட்டது. 18 மாதம் சென்று வந்தபிறகு ஜாதகரின் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. ஜாதகர் தனது சித்தப்பாவிற்கு சொந்தமான நிலத்தை விற்ற பணத்தை வங்கியில் வைப்பீட்டுத் தொகையாக்கி வட்டி தொகையில் தானதர்மம் செய்ய முன்வந்துள்ளார் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் பித்ரு தோஷம் உண்டு. 9-க்குடையவனுக்கு அஷ்டம பாதக ஸ்தானத்தோடு தொடர்பு பெறாத பித்ரு தோஷம் கானல் நீர் போன்றது. 9-க்குடையவனுக்கு அஷ்டம பாதக ஸ்தானம் சம்பந்தம் இருந்தால் பித்ரு தோஷம் ஜாதகரை வதைக்கும்.

இனி அடுத்த வாரம் சல்லிய தோஷம், வாஸ்து குற்றத்தால் தடைபடும் சொத்து விற்பனையையும் அதற்கான பரிகாரங் களையும் பார்க்கலாம்.

தொடரும்....

செல்: 98652 20406