Published on 10/09/2020 | Edited on 10/09/2020
90களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் வில்லனாக தோன்றி தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சமீப காலமாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சியின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கினார்.
‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு குறிப்பிட தகுந்த வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த மன்சூர் தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால், அவரது அடுத்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.