Skip to main content

மாசிமகத் திருவிழா.. ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலை கட்டும் பணிகள் தீவிரம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், வழிபாட்டு தளங்களில் இன்று கடவுளாக வழிபடக் கூடிய அனைவருமே நம் முன்னோர்கள். அதாவது நம்மை ஆண்டவர்கள். சிறப்பான ஆட்சி கொடுத்ததால் “ஆண்டவர்“ களை தமிழர்கள் அவர்களை மறக்காமல் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். 
 

அதே போல தான் “அய்யனார்“ ஒரு மன்னராக இருந்து மக்களை காத்தவர். அதனால் தான் தமிழர்கள் கிராம காவல் தெய்வமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். இப்படித் தான் ஒவ்வொரு கிராத்திலும் குலதெய்வம், கிராம தெய்வம் என்று வழிபட்டு வருகின்றனர்.
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் சிறப்பு கோயில் முன்பு உள்ள 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே உயரமான பிரமாண்ட வானில் தாவிச் செல்லும் குதிரை சிலை தான். அதன் எதிரே பிரமாண்ட யானை சிலை அமைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

PUDUKKOTTAI DISTRICT KEERAMANGALAM AYYANAR TEMPLE FESTIVAL

அதில் குதிரை சிலை எஞ்சியுள்ளது. நம் மண்ணையும் குலத்தையும் காத்த அய்யனாரின் வாகனம் குதிரை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் மாசி மகத்திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப் பூ வில் மாலை செய்து குதிரை சிலைக்கு அணிவித்து சிறப்பு செய்து வருகின்றனர். காலங்காலமாக நடக்கும் இந்த நிகழ்வில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடும் பெரிய திருவிழா இது. அதிலும் குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே அதிகமான மக்கள் கூடுகிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். 
 

இந்த ஆண்டு மாசி மகத் திருவிழா மாரச் 8ந் தேதி நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர். புதன்கிழமை பந்தல் கால் நடும் விழாவும் நடந்ததைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள், சாரம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 

PUDUKKOTTAI DISTRICT KEERAMANGALAM AYYANAR TEMPLE FESTIVAL

இந்த நிலையில் தான் பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்படும் 35 அடி உயர காகிதப் பூ மாலைகள் கட்டும் பணிகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், ஆவணத்தான்கோட்டை, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களிலும் தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை கட்டப்ப வாய்ப்புகள் உள்ளது. கடந்த காலங்களில் தகதகக்கும் பிளாஸ்டிக் காகிதங்களைக் கொண்டு மாலைகள் கட்டப்பட்டது. 

PUDUKKOTTAI DISTRICT KEERAMANGALAM AYYANAR TEMPLE FESTIVAL

ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை பிளாஸ்டிக் மாலைகளை தவிர்த்துவிட வேண்டும் என்று விழாக்குழுவின் கோரிக்கையை ஏற்ற கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக காகிதங்களை மட்டுமே கொண்டு மாலைகள் கட்டப்பட்டு வருகிறது. கடைசி 2 நாட்கள் மட்டும் செண்டி, கோழிக் கொண்டை, வாடாமல்லி, சம்பங்கி மலர்களைக் கொண்டு மாலைகள் கட்டப்படுகிறது.

PUDUKKOTTAI DISTRICT KEERAMANGALAM AYYANAR TEMPLE FESTIVAL

இது குறித்து மாலை கட்டும் தொழிலாளிகள் கூறும் போது, "பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான் சிறப்பு. அந்த மாலைகளை நாங்கள் கட்டுவதை பெருமையாக நினைக்கிறோம். தலைமுறை தலைமுறையாக மாலை கட்டி வருகிறோம். இதனால் எங்களுக்கு வருமானம் என்பதைவிட சில நாட்கள் கூலி கிடைக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு மாலை தான் கட்ட முடியும். அப்பறம் காகிதம், சணல் மற்ற செலவுகள் எல்லாம் இருக்கு. கடைசியில் ரூ. 2500, 3 ஆயிரத்திற்கு மாலை விற்பனை செய்கிறோம்.

PUDUKKOTTAI DISTRICT KEERAMANGALAM AYYANAR TEMPLE FESTIVAL

பலர் இப்போதே முன் தொகை கொடுத்துள்ளனர். பிளாஸ்டிக் மாலை என்றால் வேலை வேகமாக நடக்கும். அதை தடை செய்துவிட்டால் முழுமையாக காகிதத்திலேயே மாலைகள் செய்கிறோம். கடைசி இரு நாட்கள் மட்டும் மலர் மாலைகள் செய்வோம். மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் ஆகிய நாட்களில் மட்டும் மாலைகள் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் மாலை அணிவிக்க அனுமதி இல்லை. இந்த மாலை அணிவிக்கும் அழகை காண வெளிநாடுகளில் உள்ளவர்களும் குளமங்கலம் வந்துவிடுவார்கள் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.