Skip to main content

நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!

Published on 18/01/2018 | Edited on 18/01/2018
நித்தியானந்தா  ஆசிரமத்திலிருந்து இன்னொரு  வீடியோ?!

சமூக ஊடகங்களில் பரவுகிறது...





கடந்த வாரம் பாடலாசிரியர்  வைரமுத்து ஆண்டாளைப்  பற்றி எழுதிய கட்டுரைக்கும், அதைத்தொடர்ந்து ஒரு விழாவில் அதை வாசித்ததும் பெரும் சர்ச்சையானது. பா.ஜ.க.வின் மாநில செயலாளர் எச்.ராஜா இதைக் கையில் எடுத்து, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டி ஆரம்பித்துவைக்க, வழக்கம்போல் பூதாகாரமானது. அவரைத்தொடர்ந்து பிராமணர்கள், இந்து மத பற்றாளர்கள், கோவில் ஜீயர்கள்  என அனைவரும் திட்டித்தீர்த்தனர். வைரமுத்து, விளக்கமளித்து  வருத்தம் தெரிவித்தும் அது ஓயவில்லை.  இந்நிலையில் நித்தியானந்தாவின் மடத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறப்படும்  ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

  அந்த வீடியோவில் நித்தியானந்தாவின் மடத்திலிருந்து (?) பேசுவதாகக் கூறி துறவி தோற்றத்தில் இருக்கும் இளம் பெண் பேசுகிறார். இதுவும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளே. இவர்களது வீடியோவைப்  பார்க்கும்போது ராஜா பரவாயில்லை என்று தோன்றும். அவர்கள் கூறும் வார்த்தைகளில் கொஞ்சம்  நாகரீகமான வார்த்தை என்று பார்த்தால்  'நாங்கள் சந்நியாசிகள் எங்கள் சாபத்தை வாங்கிய அவர் நன்றாக இருக்கமாட்டார்'. அப்படி அவர்கள் சந்நியாசிகள் என்று பெயரளவில் மட்டுமே இருப்பது இதன்மூலம் தெரியவந்தது. இந்து மதம்தான் தமிழுக்கு ஆதி, முருகன்தான் தமிழை உருவாக்கியது என்றெல்லாம்  பேசியுள்ள அவர்,  இவ்வளவு அசிங்கமாக பேசும்போது அந்த மடத்தினுள் நடக்கும் விஷயங்கள் என்ன என்பதைக் குறித்து நமக்கு கேள்வியெழுகிறது. மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி சாக்கடையாக்கும் என்ற பெரியாரின் சொல் உறுதியாகும் வகையில் இருந்தது அந்தப் பெண் துறவியின் வார்த்தைகள். 




குரு நித்தியானந்தா 2010ல் களத்தில் ஆவேசமானார், அவரது சிஷ்யைகள்  இப்போது வலைதளத்தில் ஆவேசமாகிறார்கள். சதியையும், தேவதாசி முறையையும் நியாயப்படுத்தி அந்த இளம் பெண் பேசியிருக்கும் வார்த்தைகள் நமக்கு அவர்கள் பற்றிய கோபத்தை விட  கவலையைத்தான் அதிகப்படுத்துகின்றன. வயதிலும் மனதிலும் பக்குவப்படாமல் இருக்கும் இளம் பெண்களை இப்படிப்பட்ட, பல விஷயங்களுக்காக புகழ் பெற்ற ஒரு ஆசிரமத்துக்கு அனுப்ப பெற்றோர் எப்படி துணிகிறார்கள்? சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வரும் இந்த வீடியோவை அவர்கள் பார்த்தார்களா என்று நமக்குத்தான் கேள்விகள் எழுகின்றன...

கமல்குமார்         

சார்ந்த செய்திகள்