Skip to main content

எங்கே... எவ்வளவு? -எடப்பாடியின் ஃபாரின் கணக்கு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

அன்னிய மூலதனத்தை இந்தியா வுக்கு கொண்டு வந்ததில் ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ப.சி.யை கைது செய்த செய்தி எதிரொலித்தபோது, சென்னை கோட்டையில் தனது வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டி ருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

eps



28-ம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எடப்பாடி, 22-ம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை கோட்டைக்கு அழைத்தார். எடப்பாடியுடன் வெளிநாடு செல்லும் டீமில் இடம் பெற்றிருக்கும் அவரது ஆல் இன் ஆல் பி.ஏ. கிரிதரன் மற்றும் செயலாளர் விஜயகுமாருடன் சேர்ந்து இருநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வெளிநாட்டு பயணம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக விவாதித்தார். சுகாதாரம், தொழில்துறை, எரிசக்தி, கல்வி, பால்வளம் ஆகியவை முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் இடம் பெறப்போகும் துறைகள்.


சுகாதாரத்தை பொறுத்தவரை ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவது, கல்வித்துறையில் டிஜிட்டல்மய மான கல்விமுறையை கொண்டு வருவது, எரிசக்தி துறையில் சூரிய ஒளி மின்சார திட்டங்கள், தொழில்துறையில் தொழில் முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு, பால்வளத்தில் பண்ணைகளை வளர்க்கும் விதம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொழில்துறையில் அன்னிய முதலீட்டை கொண்டு வருவது என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முயற்சி' என தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் ஃபாரின் விசிட் பற்றிய துறை வாரியான கூட்டங் களில் சொல்லி வருகிறார். ஆனால் எடப்பாடி தனது ஃபாரின் விசிட் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அவரது அசைவுகள் மிகவும் ரகசியமானதாக இருக்கின்றன. பிரதமர், உள்துறை அமைச்சர் இவர்களிடம் மட்டுமே வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்கு ஒரு ரகசிய காரணம் இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி இலங்கையில் துறைமுகத் துறையில் ஒரு பெரிய கட்டுமானத்தை செய்ய இருக்கிறார். அதில் அதானியுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். அதுபற்றிய பேச்சுகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும் அ.தி.மு.க.விற்கும் ஒரு தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் உதவியாக இருந்த தொழிலதிபர் தற்பொழுது எடப்பாடிக்கும் உதவியாக இருக்கும்படி பா.ஜ.க. கேட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா-இங்கிலாந்து அரசுகளும் பாதுகாப்பு தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முதலீட்டை வரவேற்கின்றன. இஸ்ரேலும் தற்பொழுது சிவப்புக் கம்பளம் நீட்டி வரவேற்கிறது. அங்கு முதலீடு செய்வது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இஸ்ரேல் நாட்டுக்கு போய் வந்து விட்டார். எடப்பாடியும் "நான் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வேன்' என சேலத்தில் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார்.