Skip to main content

அந்த நடிகரை மட்டும் அமைச்சர் விமர்சிப்பது ஏன்? -காரணம் ‘பெர்சனல்’ சமாச்சாரமாம்!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019



 

அந்த அமைச்சர் தீவிரமான சினிமா ரசிகர்.  சிறுவயதில் 28 கி.மீ. சைக்கிள் மிதித்து பக்கத்து ஊருக்குச் சென்று தன் அபிமான நடிகரின் படங்களைப் பார்த்தவர். அப்போது சினிமா பாட்டுப்புத்தகமும் கையுமாகத்தான் திரிவார்.   இந்த சினிமா ரசனையும் வெறியும்தான் அவரைப் பொது வாழ்க்கையில் உச்சம் தொட வைத்தது. ஆனாலும், பிரஸ் மீட்டில் அந்த அமைச்சர் குறிப்பிட்ட ஒரு நடிகரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சுடு வார்த்தைகளால் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், தனக்குப் பிடித்த நடிகர்களை மிக வெளிப்படையாகப் பாராட்டியும் வருகிறார். 

 

arasiyal thalaivar



‘அந்த நடிகரின் மீது அப்படியென்ன கோபம்?’ என்று அந்த அமைச்சரிடமே கேட்டோம். “அவரோட நடிப்பைப் பத்தி என்னைக்காச்சும் நான் குற்றம் சொல்லிருக்கேனா? ஏன்னா.. அவரோட நடிப்பு அத்தனை சிறப்பா இருக்கும். கோமாளி அரசியல் பண்ணுறதுக்கு இங்கே நெறய பேரு இருக்காங்க.  பொது வாழ்க்கைன்னு வந்துட்டா,  நடிகரா இருந்தாலும் சரி.. யாரா இருந்தாலும் சரி.. அதற்கான தகுதி இருக்கணும். இல்லைன்னா.. தகுதியை வளர்த்துக்கணும்.  அவரு அப்படி கிடையாது. இன்னொரு விஷயம், அவரோட சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனக்கும் சினிமா இண்டஸ்ட்ரியில் நெறய நண்பர்கள் இருக்காங்க. அமைச்சர்ங்கிறதுனால கூடியமட்டிலும்  என்கிட்ட அவங்க பொய் பேசமாட்டாங்க. அப்படி கேட்டதை வச்சித்தான் அவரோட குணாதிசயத்தை தெரிஞ்சிக்கிட்டேன். 

press meet



பிரபலமான அந்த நடிகை இந்த நடிகரை விழுந்து விழுந்து லவ் பண்ணுனாங்க. அட, குடும்பமே நடத்தினாங்க. ஆனா. அவரை இவரு கல்யாணம் பண்ணிக்கல. இப்ப அவங்க உசிரோட இல்ல. இன்னொரு ஹீரோயினும் இவரோட வலையில் விழுந்தாங்க. அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு வடக்கே போயி ஓஹோன்னு ஆனாங்க. அவங்களும் இப்ப இல்ல. இதுமாதிரி டிராஜடி ஸ்டோரி நெறய இருக்கு. 


காதல் வேற.. கல்யாணம் வேறங்கிறது அவரோட பாலிசி. தன்னோட மனைவிங்கிறவ இப்படித்தான் இருக்கணும்னு தன் கண்ணுக்கு ‘ஸ்பெஷல்’ ஆகத் தெரிஞ்சவரை மொதமொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவரு எப்படின்னு அவருக்குத் தெரிஞ்சுபோச்சு. ஆளவிடுன்னு பெரிசா ஒரு கும்பிடு போட்டுட்டு தெறிச்சு ஓடிட்டாங்க. அடுத்து ஒரு நடிகையை மனைவி ஸ்தானத்துல கொண்டுவந்து வச்சாரு. அவரு மூலமா புள்ளைங்களும் பொறந்துச்சு. ஆனாலும்.. போகப்போக இவரோட சுயரூபம் வெளிப்பட்டதும், அந்தம்மா சிட்டா பறந்துட்டாங்க. வீட்ல தனக்குத் துணையா ஒருத்தர் வேணும்னு புருஷனைப் பிரிஞ்சிருந்த பழைய ஹீரோயினை வீட்ல சேர்த்து வச்சிக்கிட்டாரு. அப்பவும் இவரு அடங்கல. ஃபீல்ட்ல இருக்கிற ஃபேமஸ் ஹீரோயின் பின்னால லோலோன்னு சுத்தினாரு. ஒரு சீனியர் நடிகர் பண்ணுற வேலையா இதுன்னு சினிமாக்காரங்க எரிச்சலானாங்க. ஏன்னா.. இவரு யூத் இல்ல. அந்த ஃபேமஸ் ஹீரோயினோட சாய்ஸ் வேறயா இருந்துச்சு. அதுபோகட்டும். இவரை நம்பித்தானே அந்தப் பழைய ஹீரோயின்,  தன்னோட மகளோடு  இவரு  வீட்டுக்கே வந்து வருஷக்கணக்கா குடும்பம் நடத்தினாங்க. ஆனாலும்.. இவரு பண்ணுன காரியத்தை அவங்களால விவரமா வெளிய சொல்ல முடியல. இவருடைய நடவடிக்கையால் வெறுத்துப்போய், மகளைக் கூட்டிக்கிட்டு போயி தனியா வாழறாங்க.


இப்பச் சொல்லுங்க. சொந்த வாழ்க்கையில் இத்தனை ஓட்டையை வச்சிருக்கவரு,  பொது வாழ்க்கையில எப்படி நேர்மையானவாரா இருக்க முடியும்? அமைச்சரா இருக்கிற என் மீதும் குற்றம் குறைகள் இருக்கும்.  ஆனா.. எந்தச் சூழ்நிலையிலும் பொது வாழ்க்கையில் மக்களை நேசிக்கிறவனாத்தான் எப்பவும் இருப்பேன். என்னால முடிஞ்ச நல்லதை எந்தப் பாகுபாடும் காட்டாம பலருக்கும் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு அந்த நடிகர் யாருக்கும் பெரிசா நல்லது பண்ணி நான் கேள்விப்பட்டதில்ல. அவரை நான் விமர்சிக்கிறதும் தப்பில்ல.” என்று நீண்ட விளக்கம் தந்தார். 


நடிக்கத் தெரிந்து வாய்ப்பு கிடைத்தால் நடிகராகிவிடலாம். நாலு பேருக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்து, மக்களை நேசிப்பதில் போலி முகம் காட்டாமல்  ‘ஒரிஜினல்’ சேவையாற்றினால், பொது வாழ்க்கையிலும்  ‘விஸ்வரூபம்’ எடுக்கலாம். 

 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.