Skip to main content

இங்கு நியாயத்திற்கு என்ன மதிப்பு? - அக்னி தேவியால் பாபி சிம்ஹா ஆவேசம்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் அக்னி தேவி. இந்த திரைப்படத்தின் இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இயக்குனர் ஜான் பால்ராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுள்ளார். வழக்கு நடைபெறும் நிலையில் படம் வெளியானதால் அதிர்ப்தியடைந்த பாபி சிம்ஹா, இது குறித்து சர்ச்சைக்குறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

Babhi simha get angry

 

“அக்னி தேவ் என்ற படத்தின் மேல் வழக்கு நடக்கிறது. இருந்தும் அக்னி தேவி என்ற பெயர் மாற்றி சென்சார் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு டி.சி அலுவலகத்தில் படத்தின் இயக்குனரின் மேல் எஃப்.ஐ.ஆர் வாங்கியாச்சு, ஏற்கனவே கோர்ட்டில் படத்தின் மீது தற்காலிக தடை உத்தரவும் வாங்கிவிட்டோம். அப்படி இருந்தும் இந்த படம் வெளியாகியிருக்கு. எல்லோருக்கும் இதில் உள்ள பிரச்சனைத் தெரியும். 
 

எனது ஒப்பந்தத்தின் படி படத்தின் பெயர் அக்னி தேவ், ஜான் பால்ராஜ் தான் இயக்குனர், ஜூன் முதல் செப்டம்பர் வரை எதாவது 25 நாட்கள் என்னுடைய கால் சீட். ஆனால், நான் இதில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நடித்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஐந்து நாளில் நான் நடித்ததை வைத்து எப்படி படத்தை முடிச்சாங்கனு எனக்கு தெரியல. கோர்ட்டில் நான் சொல்லியிருக்கேன், படத்தில் வருவது என்னுடைய குரல் இல்லை, வேறுயாரோ டப்பிங் பண்ணியிருக்காங்க. எனக்கு பதில் வேறோருவரை டூப்பாக பயன்படுத்தி, முகத்தில் கிராஃபிக்ஸ் செய்து படத்தை முடித்துள்ளனர். இது நியாயமா?
 

நான் கோர்ட்டில் முறையிட்டபோது உங்களுக்கான நியாயம் கிடைக்கும் என்று படத்துக்கு தற்காலிக தடை கொடுத்திருக்காங்க. அப்படியிருந்தும் படம் எப்படி வெளியானது? இங்கு நியாயத்திற்கு என்ன மதிப்பு? இதற்குப் பின் என்ன அரசியல் இருக்கு? தயாரிப்பாளர் சங்கம் ஏன் இவ்வளவு முனைப்பாக இந்தப் படத்தை வெளியிட்டாங்க? இதற்குப் பின் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? என்பது எதுவும் தெரியவில்லை. எனகே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. 
என்கிட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு, டூப் போட்டு க்ராபிக்ஸ் செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். அது என் குரலே இல்லை. அதற்கான எல்லா ஆதாரங்களையும் கோர்ட்டில் காட்டினேன். அது நிருபிக்கப்பட்டுவிட்டது. 
 

இது எல்லாம் தெரிந்தும் ஏன் இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்து வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. என்ன பழிவாங்குற நோக்கத்தில் பண்றாங்களானு புரியல. நிறைய நல்ல படம் இருக்கு சார், அதையெல்லாம் ரிலீஸ் பண்ண முடியாமல் கஷ்டபடுறாங்க. அவங்களுக்கு ஆதரவு கொடுத்து படத்தை வெளியிட உதவுங்க. அதைவிட்டுட்டு ஃபிராடு பண்ணியிருக்க படத்துக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க. இது நம்ப தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும். வேறெந்த மாநிலத்திலும் இவ்வளவு பலவீனமான அமைப்பு இருக்குமானு தெரியல”. என்று கூறியுள்ளார். இது சினிமா வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.