Skip to main content

ஹார்ட் அட்டாக்கிற்கும் ஹார்ட் ஃபெயிலியருக்குமான வித்தியாசம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Heart attack and Heart Failure difference

 

இதய அடைப்பிற்கும், இதய செயலிழப்பிற்குமான வித்தியாசம் என்ன? இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ் அவர்களை நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சந்தித்த போது அவரிடம் முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..

 

இதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்)
இதயத்திற்கும் ரத்த ஓட்டம் தேவைப்படும். அதற்கும் ஆக்சிஜன் தேவை இருக்கும். இதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் குறையும் போது, ஆக்சிஜன் அளவு குறையும் போது இதயத்துடிப்பின் அளவு குறைந்து போகும். இது தான் இதய செயலிழப்பு (ஹார்ட் அட்டாக்). மீண்டும் இதயத்திற்கு போகிற இரத்த அளவை சரி செய்து கொள்வதன் மூலம் குணப்படுத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.

 

இதயச் செயலிழப்பு (ஹார்ட் ஃபெயிலியர்)
இதயம் துடிப்பதே ஒட்டுமொத்தமாக குறைந்தால் அது இதயச் செயலிழப்பு. இதய அடைப்பு ஏற்பட்டதற்கு பிறகான அடுத்த நிலையாக இதயச் செயலிழப்பை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. மரபு வழியாக அப்பாவிற்கு இருந்தும் அவர்கள் வழியாக பிறந்த பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. ஆல்கஹாலுக்கு அடிமையாகி தீவிர குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஈரலில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுதோ அதே போல இதயத்திற்கு போகிற இரத்த அளவும் குறைந்து கொண்டே வந்து இதயத்தினையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். செயலிழக்கச் செய்யும். 

 

 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

உற்சாகமாய் பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tragedy happened to the student when she went to school at karnataka

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனா. இவருக்குத் திருமணமாகி சுமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சிருஷ்டி (13) என்ற மகள் இருந்தார். சிருஷ்டி, தரடஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது பள்ளிக்குத் தினமும் நடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சிருஷ்டி நேற்று (20-12-23) காலை வழக்கம்போல் தனது பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிருஷ்டிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவரை, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.