Skip to main content

வரலாற்றிலேயே முதன்முறையாக கனடா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான இந்தியர்...

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

கனடா நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடாவின் பர்னபி தெற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த மாதம் தேர்வானார். இதன்மூலம் கனடா அரசியல் வரலாற்றிலேயே ஒரு இந்திய எம்.பி முதன்முறையாக எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளது இதுவே முதல் முறை. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

jagmeet

 

இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய கனடா நாடாளுமன்ற கூட்டத்தில் இவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது, "எதிர்க்கட்சி தலைவரானதில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த வாரம் நியூஸிலாந்து மசூதிகளில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 49 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு எங்களது ஆறுதல்களை தெரிவிக்கிறோம். மேலும் தெற்குபர்னபி நகரில் உள்ள மக்களுக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லை. எனவே அவர்களுக்குத் தேவையான வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு அரசு 5 லட்சம் வீடுகளைக் கட்டித் தர உறுதி அளிக்குமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜக்மித் சிங்குக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு. அவரின் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.