போலீஸ் தாக்கியதில் தொழிலாளி பலி
கடலூர் மாவட்டம் திருமானிக்குழியில் மணல் அள்ளிய தொழிலாளியை போலீஸ் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பலியானார். திருமானிக்குழியில் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிய தொழிலாளி சக்ரபாணி என்பவரை போலீஸ் தாக்கியாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து நடு வீரப்பட்டு போலீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.