Skip to main content

போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவரின் மனைவி வெட்டிக் கொலை!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Woman passes away near cuddalore police arrested four and investigating

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (30), இவரது மனைவி காந்திமதி (27). கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையைச் சேர்ந்த கனகராஜ் மகனும் ரவுடியுமான வீரா என்கிற வீரங்கனை தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். அவ்வாறு தப்ப முயன்றபோது, கிருஷ்ணன் காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணனின் கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில், கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று முந்தைய தினம் (18.09.2021) இரவு குப்பங்குளத்தில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

 

இதில் காந்திமதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட காந்திமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அதேசமயம், காந்திமதிக்கு வேறு ஒருவருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தன், காந்திமதியிடம் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அரவிந்தன், காந்திமதியின் உறவினரான சிறுவன் ஒருவன் மூலம் காந்திமதியை வரவழைத்து அச்சிறுவன் உட்பட மேலும் இரு சிறுவர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து அரவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளைக் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.