Skip to main content

சுடுகாட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! தோண்டி பார்த்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Woman passed away police found body

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள பொது இடுகாட்டில் திடீரென பள்ளம் தோண்டி அது மூடப்பட்ட அடையாளம் தெரிந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

அந்தப் புகாரின் அடிப்படையில், புதிதாக தோண்டி மூடப்பட்ட அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராம்குமார், அப்பகுதி போதகர் செந்தில்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுடுகாட்டில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர்.

 

அந்தக் குழியின் உள்ளே ஒரு சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதை வெளியே எடுத்துப் பார்த்த போது, மூட்டையின் உள்ளே 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்துள்ளது. மேலும், அவரது வாயில் துணியை கட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துக்கட்டி புதைத்துள்ளது தெரியவந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


தடய அறிவியல் அலுவலர் சர்மிளா தடயங்களை சேகரித்தார். அதன் பின் அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே குழியில் பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


யாரோ சில மர்ம நபர்கள் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி கொண்டு வந்து இந்த சுடுகாட்டில் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அந்த பெண் யார்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலையை செய்தனர்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.