Skip to main content

அந்த செல்ஃபோன் எங்கே...? முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மதுரையில் விசாரணை! 

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

Where is that cell phone ...? Ex-minister Manikandan interrogated in Madurai

 

துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துணை நடிகையின் புகாரில் கைதான அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.  

 

முன்னதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு மதுரை அழைத்துவரப்பட்ட மணிகண்டன் மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் செல்ஃபோனில் தான் அந்த துணை நடிகையின் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும், அதுதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

எனவே அந்த ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக மணிகண்டனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிறகு அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள போலீசார், மதுரையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய பிறகு, மதுரையில் எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் அதை துணை நடிகையை அழைத்துச் சென்றார் என்பது தொடர்பான விசாரணை செய்து பதிவு செய்ய இருக்கின்றனர். அதேபோல் மதுரை விசாரணைக்குப் பிறகு ராமநாதபுரம் அழைத்துச் சென்று அவர் விசாரிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.