Skip to main content

“இதுதான் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் கண்ணை உறுத்துகிறது” - பிஎஃப்ஐ சென்னை மண்டலத் தலைவர்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

“This is what makes RSS and BJP tick” - BFI Chennai Zonal President

 

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் இன்று சோதனை நடத்தப்பட்டது.

 

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் மேலும் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இந்திய அளவில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைகளை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் போரட்டங்களை நடத்துகின்றனர்.

 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சென்னை மண்டலத் தலைவர் பக்கீர் முகமது, “பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு என்பதைத் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களின் அமைப்பாக இன்று உருமாறி இருக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கண்ணை உறுத்துகிறது.

 

மூன்று முதல் நான்கு மாததிற்கு முன்பு தான் இவர்கள் சோதனை இட்டனர். அப்போதும் எதும் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் எங்கள் அலுவலகங்களை சோதனையிடுகின்றனர். இந்த சோதனையிலும் இவர்களுக்கு எதும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக பாடுபடுகின்றோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.