Skip to main content

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி; ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்த கிராம மக்கள்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Calquary operating in violation of the rules; Villagers invaded the Collectorate

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென வந்த கிராம மக்கள், விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கரடிக்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு கல் உடைத்து எடுக்க அரசிடம் கல்குவாரி அனுமதிக்கான உரிமத்தை பெற்று கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அரசின் விதிகளை மீறி தினமும் 24 மணி நேரமும் கல் உடைத்து எடுப்பதாகவும். இரவு நேரங்களில் அதிகப்படியான கனத்த ஒலி எழுப்பக்கூடிய வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை வெடிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இரவில் தூங்க முடியவில்லை, வயதானவர்கள் இந்த சத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், பயப்படுகின்றனர். மருத்துவ நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் கிராமத்தின் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரமும் பாதிக்கிறது. விதிகளை மீறி அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தும் விதமாக வெடிவைத்து மலையை வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனை ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக கரடிக்குடி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் திடீரென வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததைக் கண்டு ஒரே பிரச்சனைக்கு அவ்வளவு பொதுமக்கள் கூடியதைப் பார்த்து அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதன்பின் போலீசாரை வைத்து முக்கியமானவர்கள் மட்டும் பேசுங்கள் எனச்சொல்லி அவர்களை மட்டும் உள்ளே இருந்து மனு தரச்செய்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிர்வாழ போராட்டம்; ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆட்சியர் அலுவலகம் வந்த ஊழியர்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
 employee came to the collector office with an oxygen cylinder and gave the petition

திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சையில் திருப்தி இல்லாததால் அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றால் ரூபாய் 45 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலைக்குச் சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். தற்போது மிகப்பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் செயற்கை சுவாசத்தால் மட்டுமே அவர் உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது.  இதைத்தொடர்ந்து பிரவீன் குமார் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்து அவரைப் பார்த்து அதிகாரிகள் நீங்கள் ஏன் வந்தீர்கள்? வேறு நபர்களை அனுப்பியிருக்கலாமே எனக் கூறினர் பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் தனியார் தொழிற்சாலையில் நாங்கள் பேசி முடிவு எடுக்கிறோம் எனவும் உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.