Skip to main content

ஆய்வுக்குப்போன கிராம உதவியாளர் கார் மோதி பலி... சாலை மறியலால் பரபரப்பு!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Village assistant in car crash... incident in pudukottai

 

தமிழகத்தில் கடந்த காலங்களில் மண், மணல் திருட்டை தடுக்கச் சென்ற அதிகாரிகளை ஈவு இறக்கமின்றி படுகொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

அறந்தாங்கி தாலுகா, கம்மங்காடு சரக கிராம உதவியாளராக உள்ளவர் செந்தில். புதன்கிழமை ஆளப்பிறந்தான் குடிக்காடு கண்மாயில் மண் அதிகமாக எடுக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் வர, உடனடியாக கிராம உதவியாளர் செந்திலை சம்பந்தப்பட்ட கண்மாய்க்கு அனுப்பி ஆய்வு செய்யக் கூறியுள்ளார்.

 

ஆய்வுக்குச் சென்ற கிராம உதவியாளர் செந்தில் கண்மாயை பார்த்த பிறகு ஆளப்பிறந்தான் கடைவீதியில் சாலை ஓரம் நின்று அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, புதுப்பட்டி பக்கத்திலிருந்து அறந்தாங்கி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரமாக நின்ற கிராம உதவியாளர் செந்தில் மீது மோத தூக்கி வீசப்பட்ட செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Village assistant in car crash... incident in pudukottai

 

கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட, கார் புதுப்பட்டி அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவருடையது என்பது தெரிய வந்துள்ளது. மண் திருட்டை அதிகாரிகளுக்கு தகவல் சொன்னதால் கிராம உதவியாளர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைவில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சரியான விசாரணை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மண் திருட்டை தடுக்கச் சென்றதால்தான் விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. விபத்தில் பலியான செந்திலுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.