Skip to main content

பெங்களூரில் இருந்து வேலூருக்கு சுற்றுலா வந்த கார் கண்டெய்னர் மீது மோதியதில் 7 பேர் பலி

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

மகாராஷ்டிர மாநிலம் புல்சாவல் பகுதியை சார்ந்தவர் மெல்வின் தேஷ்முக். இவர் ரயில்வே காவல் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.  இவர் தனது குடும்பத்தாரோடு மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூருக்கு காரில் சுற்றுலா வந்துள்ளார். கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு சென்றவர்கள், பின்னர் கார் மூலமாக வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். வேலூருக்கு வந்து தங்ககோயில் உட்பட பல பகுதிகளை பார்த்து ரசித்துவிட்டு மே 6ந்தேதி இன்று மதியம் பெங்களூர் நோக்கி காரில் புறப்பட்டனர்.

 

a

 

இவர்களது கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமம் அருகே செல்லும்போது, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  ஓரமாக கண்டெய்னர் லாரி நின்றிருந்தது. வேலூரில் இருந்து வந்த தேஷ்முக்கின் காரின் முன் பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பக்கத்தில் மோதியதில் காரில் பயணித்த மெல்வின் தேஷ்முக் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

 

a

 

இந்த இடர்பாடுகளில் சிக்கிய உடல்களை ஆம்பூர் தாலுக்கா போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து மீட்டனர். இதில் தேஷ்முக் உட்பட 4 ஆண்கள், இரண்டு பெண்கள், 1 குழந்தை உடல்கள் நசுங்கிய நிலையில் இருந்தது. அந்த உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடல்களை மீட்கும்போது அவர்களுக்கு கிடைத்த அடையாள அட்டையை கொண்டு இரயில்வே போலிஸார் மூலமாகவும், தாங்களும் இறந்தவர்கள் மாநில போலிஸாருக்கு, வேலூர் மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

a

 

சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் நோ பார்க்கிங் பகுதியில் கனரக வாகனங்கள் அங்காங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலை ரோந்து போலிஸார் 50, 100 ரூபாய் என மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுக்கொள்வதில்லை. சாலையை பராமரிக்கிறோம் எனச்சொல்லி வாகன கட்டணம் பெறும் சுங்கச்சாவடி நிர்வாகங்களும் கண்டுக்கொள்வதில்லை. அதனாலயே இதுப்போன்ற விபத்துக்கள் நடக்கின்றன என்கின்றனர் வாகன ஓட்டுநர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்