Skip to main content

காதல் திருமணம்; மகளையும் மருமகனை கொன்ற கொடூர தந்தை! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் காதல் திருணம் செய்த தம்பதியரை 26வது நாளில் மகளையும் மருமகனையும் வெட்டிக் கொன்றிருக்கிறார் ஒரு கொடூரத் தந்தை. உறைந்து போய்க் கிடக்கிறது அந்தக் கிராமம்.

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகாலட்சுமி. இவர்களின் ஒரே மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். ரேஷ்மா, அவர் கிராமத்தைச் சேர்ந்த தன் உறவினரான மாணிக்கராஜ் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருக்கிறார். இவர்களின் காதலையறிந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். முத்துக்குட்டிக்கு, மாணிக்கராஜின் குடும்பத்தாருடன் ஏற்கனவே பகைமை இருந்திருக்கிறது. மேலும் தன் மகளுக்கு வேறு இடத்தில் வரன் தேடியிருக்கிறார் முத்துக்குட்டி.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

இதனிடையே கடந்த ஜூன் 26 அன்று ரேஷ்மாவுக்குப் பூப்புனித நீராட்டு நடந்திருக்கிறது. அதற்கு மறு நாள் ரேஷ்மாவும், மாணிக்கராஜும் தலைமறைவானார்கள். ஜூன் 29 அன்று திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வசித்திருக்கின்றனர். அதே சமயம் தன் மகளைக் காணவில்லை என முத்துக்குடி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இந்த நிலையில், காதல் தம்பதியர் ஊர் திரும்ப எண்ணிய நிலையில், நிலைமை சரியில்லை. இப்போதைக்கு திரும்ப வேண்டாம் என்று உறவினர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.

 

ஆனால், அதையும் மீறி காதல் தம்பதியர் கடந்த வாரம் ஊர் திரும்பியிருக்கிறார்கள். தன் தாயார் பேச்சியம்மாளுடன் மாணிக்கராஜ் தங்கியிருக்கிறார். இந்த தகவல் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்குப் போயிருக்கிறது. பேச்சியம்மாள் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்று வருகிறவர். 

 

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை முடிந்து மாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, மகனும் மருமகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியில் அவர் கதறி அழுதுள்ளார். இவரின் சத்தம் கேட்டு கிராமத்தவர்கள் அங்கு திரண்டனர்.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தகவலறிந்து சம்பவ இடம் வந்த எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெண்ணின் தந்தையான முத்துக்குட்டி அன்றைய தினம் மாணிக்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கட்டிலில் படுத்திருந்த மாணிக்கராஜை ஆத்திரத்துடன் வெட்ட முயன்றுள்ளார். அந்தச் சத்தம் கேட்ட மகள் ரேஷ்மா தந்தையைத் தடுத்திருக்கிறார். தடுக்க முயன்ற மகளை முதலில் சரமாரியாக வெட்டியவர், பிறகு மாணிக்கராஜை வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே காதல் தம்பதி இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது. தம்பதியரைப் பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கொன்று விட்டுத் தப்பியோடி இருக்கிறார். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளைப் போலீசார் முத்துக்குட்டியின் வீட்டில் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எட்டயபுரம் போலீசார் தப்பியோடிய முத்துக்குட்டியை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.