Skip to main content

கலாம் கனவை நினைவாக்க களமிறங்கினோம்... பொறியாளர் ஹக்கீம்!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

இன்றைய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் படித்த பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகவியல், வழக்கறிஞர்கள் எல்லாருமே இளைஞர்கள், இளம் பெண்கள் தான். 


களத்திலிருக்கும் அவர்கள் சொல்வதோ.. டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்க கடைசி காலம் இது அதனால் தான் இளைஞர்கள் களமிறங்கி இருக்கிறோம். பணத்தை நம்பி வாக்கு கேட்கவில்லை என்கிறார்கள்.

இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் எப்படி இருந்ததோ அதைப் பற்றி குறை சொல்லி பயனில்லை இனி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லி வாக்கு கேட்கிறோம் என்கிறார்கள். 

FORMER PRESIDENT APJ ABDUL KALAM ENGINEER HAKKIM LOCAL BODY ELECTION

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தின் 12- வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் அப்துல் ஹக்கீம் (வயது 29) பிஇ ஏரோநாட்டிக்கல் படித்துவிட்டு, மலேசியாவில் நல்ல சம்பளத்தில் வேலை செய்தவர். தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்கிறார்.


இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் இந்திய இளைஞர்களின் மனதில் நிற்கும் மாமனிதர். அவருடைய கனவு இந்தியா 2020. அந்த கனவை நினைவாக்க கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இந்த உள்ளாட்சித் தேர்தல். அதனால் தான் இதுவரை இல்லாத அளவில், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சாராத இளைஞர்கள் அதிகாக களமிறங்கி உள்ளனர். 

ஒரு நாட்டின் அடிப்படை உள்ளாட்சி தான். உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் ஒன்றிய, மாவட்ட, மாநில, மத்திய நிர்வாகமும் சிறப்படையும். அதன் முதல்படி தான் இந்த தேர்தல். யாரும் யாரையும் குறை சொல்லி பயனில்லை. அதனால் நாளை செய்யப் போவதை மட்டும் சொல்லியே வாக்கு சேகரிக்கிறோம்.  இந்த தேர்தல் கலாம் கனவை நினைவாக்கும் தேர்தலாக பார்க்கிறோம். இதன் மூலம் உள்ளாட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டாலே நாடும் வளம் பெறும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.