Skip to main content

உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு திருடும் டவுசர் திருடர்கள்... போலீசாரிடம் சிக்கிய பின்னணி

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ட்ரவுசர் திருடர்கள் எனும் திருட்டு கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளனது. 

 

கொள்ளை சம்பவத்தின் போது பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு திருடும் வழக்கத்தை கொண்டவர்கள்  இந்த டவுசர் திருடர்கள்.

 

police

 

உடலில் எண்ணையை தேய்த்துக் கொண்டு திருடுவதற்காக களத்தில் இறங்குவது தான் டிரவுசர் திருடர்களின் வழக்கம். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் டவுசர் திருடர்கள் என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு பிரபலமானவர்கள் இந்த வகை திருடர்கள்.

 

 

திருட்டு சம்பவங்களின் பொழுது பொதுமக்கள் பிடியில் சிக்கி விட்டால் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது இந்த வகை திருடர்களின் வழக்கம். அதேபோல் பொதுமக்கள் துரத்தும் பொழுது வேகமாக ஓடுவதற்கு ஏதுவாக இவர்கள் பிரவுசர்கள் மட்டுமே அணிந்திருப்பார்கள் இதனாலேயே இவர்களுக்கு டவுசர் திருடர்கள் என்ற பெயர் உருவானது. ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் துணிகரமாக வீடு புகுந்து திருடும் இந்த திருடர்கள் பெண்களிடம் நகை பறித்த அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுதல் ஆகிய கொடூரங்களையும் அரங்கேற்றி வந்தனர். ஸ்க்ரூட்ரைவர் கம்பி கொண்டு கதவை உடைத்து திருடுவதில் வல்லவர்கள். 

 

police

 

இந்த திருடர்கள் காலையில் ஸ்டவ் ரிப்பேர், காய்கறி விற்பது இப்படி ஏதாவது ஒரு வேடங்களில் நோட்டமிட்டு இரவில் உருமாற்றி கொண்டு உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு களத்தில் திருட இறங்குவர். திருடச் செல்லும் பொழுது வாகனங்கள் எதையும் இவர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பிச் சென்றுவிடுவார். அவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் ஏராளம் ஏராளம் எந்த தடையமும் இல்லாத காரணத்தால் ட்ரவுசர் கொள்ளையர்களை  பிடிப்பது என்பது போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது.

police

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ட்ரவுசர் கொள்ளையர்கள் சிக்கிக் கொண்டனர். திண்டிவனத்தில் கடந்த 24ம் தேதி மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று பேர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை உரிமையாளர் தடுத்த பொழுது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் அந்த ட்ரவுசர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

 

டவுசர் கொள்ளையர்களான அருணாச்சலம், பாண்டியன், வேடியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

police

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி யைச் சேர்ந்த அருணாச்சலம் சோழ பாண்டிய புரத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் வேடியப்பன் இந்த மூவரும்தான் டிரவுசர் கொள்ளையர்கள் என்பதை போலீசார் உறுதி செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை கர்நாடகத்திற்கு கொண்டு சென்று நகை வியாபாரிகளிடம் கொடுத்து உருக்கி தங்கக்கட்டிகளாக  விற்றுவிடுவதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரில் பன்றிகள் மேய்த்துக்கொண்டு குடிசை வீட்டில் இருக்கும் இந்த கொள்ளையர்களுக்கு  கர்நாடகாவில் சொகுசு வீடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 அவர்களிடமிருந்து இரண்டு தங்கச்சங்கிலி, 28 சவரன் உருக்கிய தங்க கட்டிகள் ஆறு கொலுசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.