names missing tamil nadu governor office invitation

Advertisment

சட்டமேதை அம்பேத்கரின்66 வது நினைவு தினம் கடந்த 6 ஆம்தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில்டிசம்பர் 6 ஆம்தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு புதிதாக சிலை அமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கானஅழைப்பிதழ் ஆளுநர் மளிகை சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கும் அனுப்பப்பட்டது.

விழாவில், தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கரின் சிலையைத்திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர்இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகையின்சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில்ஆளுநர் பெயரும்மத்திய இணை அமைச்சர் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் பெயரும்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெயரும் விடுபட்டுஇருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செயல் தவறுதலாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன்வேண்டுமென்றே பெயர் விடுபட்டுள்ளதா என்ற ரீதியில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தி பேசுபொருளாக இந்தச் சம்பவம் உள்ளது. மேலும், இந்தச் சிலை திறப்பு நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற விழா இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிலையில், ஆளுநரும்மத்திய இணை அமைச்சரும் பேசிய நிலையில், தலைமைச் செயலாளரையும்அமைச்சரையும் பேச அழைக்காமல் தவிர்த்ததும்பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.