Skip to main content

கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு... சிசிடிவியால் சிக்கிய மூன்று பேர் கைது!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

 Three arrested for stabbing cell phone with CCTV

 

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த நபரை கத்தியால் தாக்கி மூன்றுபேர் செல்போன் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே டிக்கெட் கவுன்டர் பக்கத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் அவரது பெண் தோழியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அசோக்கிடம் இருந்து செல்போனை பறிக்க மூன்று நபர்கள் முயன்றுள்ளனர். ஆனால் செல்போனை கொடுக்க அசோக் மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கி விட்டு செல்போனை பறித்து சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த நிலையில். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

 Three arrested for stabbing cell phone with CCTV

 

இந்நிலையில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பாலா, மகேஷ் மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த நிர்மல் என்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே ஐந்துக்கு மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்