Skip to main content

25 வயது பெண்ணை கொலையாளி மயக்கியது எப்படி? சேலம் கொலை சம்பவத்தில் பரபரப்பு பின்னணி!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சேலத்தில், குளிர்பான கடைக்குள் புகுந்து திருமணத்திற்கு மறுத்த 25 வயது இளம்பெண்ணை 55 வயது கொலையாளி கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 


சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் இனாமுல்லாஹ் (55). அப்பகுதியில் உள்ள ஆசாத் நகரைச் சேர்ந்த ஷெரீன் சித்தாரா பானு (25) என்பவரை வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 5, 2019) அவர் பணியாற்றி வந்த குளிர்பான கடைக்குள் புகுந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு அவரும் அதே கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

 


அவர் எழுதியிருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தில், இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் சித்தாராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அனுமதி கேட்டதற்கு அவர் மறுத்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். 

 

 


இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 


கொலையாளி இனாமுல்லாஹ், சூரமங்கலம் பகுதியில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினரிடையே முக்கிய பிரமுகராக இருந்து வந்துள்ளார். மேலும், அவர் பல ஆண்டுகளாக துபை, குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு முஸ்லிம் பெண்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தனக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருமாறு சித்தாரா பானு அவரை அணுகியுள்ளார்.

 

salem girl murder case Background


அவருடைய அழகில் மயங்கிய இனாமுல்லாஹ், சித்தாராவுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தராமல் தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் இனாமுல்லாஹ் அவர் மீது காதல் வசப்பட்டது தெரிய வந்துள்ளது. சித்தாராவும் அவரின் கனிவான பேச்சில் மயங்கியுள்ளார்.

 

 


இருவரும் நெருங்கிப்பழகுவது தெரிய வந்ததால், சித்தாராவின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். அதற்கான வேலைகளையும் இனாமுல்லாஹ்தான் முன்னின்று முடித்துக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இன்னும் நெருக்கமாகி, உடல் அளவிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் வரை சென்றுள்ளது.

 

salem girl murder case Background


இதனால் இனாமுல்லாஹின் மனைவியும் அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில்தான், சித்தாராவை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடர விரும்பிய இனாமுல்லாஹ் அவரின் சம்மதம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். திருமணத்திற்கு சித்தாரா சம்மதிக்காததால் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவும் முன்பே தீர்க்கமாக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 


சித்தாராவை கொலை செய்வதற்காகவே இனாமுல்லா, ஒரு கத்தியை கடையில் வாங்கியுள்ளார். அந்த கத்தியில் அவர் தனது பெயரை பொறித்துள்ளார். இதை வைத்துதான், சித்தாராவை தீர்த்துக்கட்ட இனாமுல்லாஹ் முன்பே முடிவு செய்திருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சித்தாராவுக்கு கடந்த மார்ச் 6ம் தேதியிட்டு இனாமுல்லாஹ் ஒரு கடிதம் எழுதியிருந்துள்ளார். 9 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

 

murder


சித்தாரா, நாம் இருவரும் இன்றைய நிலையில் வெறுத்து ஒதுங்கி கோபமாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கணக்கு வைத்துக்கொண்டாலும்கூட நாம் இருவரும் 150 தடவைக்கு மேல் உடலால் ஒன்று சேர்ந்துள்ளோம். 

 

 


இதை நம் இருவரின் குடும்பத்தாரும் மிக சாதாரணமாகக் கருதி ஒதுங்கிக்கொண்டாலும், நாம் செய்த பெரும் பாவத்தை அல்லாஹ் மறந்துவிடுவானா? அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நாம் மீள முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால், நம் இருவருக்கும் இந்த நிமிடம் வரை அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளான்.

 


சித்தாரா, உனக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நம்முடைய தவறான செயலால் ஏற்பட்ட பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்க, முதல் குற்றவாளியான நானும், இரண்டாவது குற்றவாளியான நீயும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க, நாம் இருவரும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் இனாமுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.