Skip to main content

நகை அடகு வியாபாரியிடம் கொள்ளை – திருடனை தேட பணம் வாங்கிய போலிஸ்!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019


வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சந்தை கோட்டையூர் அப்பாச்சி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 35 இளைஞரான அவின்குமார். இவர் கோடியூரில் நகை அடகு கடை வைத்துள்ளார்.

 
ஜீன் 6 ந்தேதி இரவு 8 மணியளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு அன்று அடகுக்கு வந்த நகை, கடையில் இருந்த பணம் போன்றவற்றை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மார்க்கெட்க்கு வந்த தனது தாயாரை வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

robbery



அப்போது பழைய வாரச் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்பக்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தை மறிந்து நின்றது. அவின்குமார் சடார் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியுள்ளார்.

 

அந்த வாகனத்தில் வந்த இருவர் அவின்குமார் வைத்திருந்த 12.4 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்துக்கொண்டு அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே சென்று இருட்டில் மறைந்துள்ளனர்.

 

இது குறித்து அவின்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்களை தேடச்செல்ல செலவுக்கு பணம் தா என அந்த வியாபாரியிடம் மிரட்டி பணம் வாங்கியுள்ளனர் போலிஸார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.