Skip to main content

கைதுக்குப் பயந்து தப்பி ஓட்டம்! 

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

முன் அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்ற, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கைதுக்குப் பயந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. 

 

திருச்சியில், இன்று காலை 8 மணியில் இருந்து, இந்து முன்னணியின் பேரணி நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைக் கைது செய்யக் காவல்துறையினர் மதியம் 12 மணி வரை காத்திருந்தனர். 

 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்து முன்னணியைச் சேர்ந்த 8 பேர், ஆன்மிக அரசியலை ஆதரித்துப் பேரணி செல்ல முயன்றனர். பேரணி செல்ல முயற்சி செய்தவர்களை, காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தபோது, நாங்கள் வீட்டிற்குச் செல்கிறோம் என்று கூறி ஒருவர் கூட கைதாகாமல், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பித்து ஓடியுள்ளார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்