Skip to main content

எனது உயிருக்கு ஆபத்து : முதல் அமைச்சர் மகன் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
roja


தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கூறியுள்ளார்.
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அகரம்பேட்டையை சேர்ந்த சுமதி என்ற பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இருசக்கர வானத்தின் மீது அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
 

 

 

சம்பவத்தை அறிந்த சுமதியின் உறவினர்கள் அங்கு கூடினர். சுமதியின் உடலை பார்த்து கதறி அழுந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ரோஜா, காரை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளார். 
 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசியதாக சுமதியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
 

இதனை கேட்ட ரோஜா, உடனடியாக சென்னை - திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த போலீசார் ரோஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த விபத்து சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து அந்த இடத்தில் இருந்து ரோஜா புறப்பட்டார்.
 

 

 

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, சாலைமறியல் போராட்டம் தொடர்பாக என் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரி போலீஸார் தெரிவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

 

 

முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.

அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக, சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக  தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இறந்த பிறகு உடல் உறுப்புகளை மண்ணுல புதைக்காதீங்க, மனிதருக்கு கொடுங்க” -  அமைச்சர் ரோஜா

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Minister Roja said to donate body parts.

 

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஜா, வேலூர் மாநகர மேயர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

விழாவில் பேசிய ரோஜா, “ரத்த தானம் அனைவருக்கும் தெரியும். உடல் உறுப்பு தானம் பொதுமக்களுக்கு அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உயிரிழந்த பின்னரும் மற்றவர் ஒருவருக்கு வாழ்க்கை கொடுப்பது தான் உடல் உறுப்பு தானம். தற்போதுள்ள இளைஞர்களுக்கு இதற்கான விழிப்புணர்வு அதிகம் தேவை. எந்த ஒரு மதமும் எந்த ஒரு தெய்வமும் உடல் உறுப்பு தானம் செய்யக்கூடாது என்று கூறவில்லை. தானத்தில் சிறந்தது அன்னதானம் அதைவிட சிறந்தது உடல் உறுப்பு தானம்.

 

இன்றைக்கு ஆயிரம் மடங்கு சிறந்த தானம் உடல் உறுப்பு தானம். அன்னதானம் பசியைப் போக்கும். கல்வி தானம் அறியாமையைப் போக்கும், உடல் உறுப்பு தானம் ஒரு மனிதனுக்கு உயிரையே கொடுக்கும். உறுப்பு தானம் அளிக்கப்படுவதன் மூலம் இறந்த பிறகு நாம் உயிரோடு வாழ்வோம்.

 

இறந்த பிறகும் நாம் கடவுளாக இருப்பதற்கு நான்கு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்தால் போதுமானது. இறந்த பிறகு உடல் உறுப்புகளை மண்ணில் புதைக்காதீங்க. மனுஷங்க மேல விதையுங்கள். அப்போது நாம் வாழ்வோம். இன்றைய இளைஞர்கள் உடல் உறுப்பு தானம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

 

 

 

 

Next Story

சர்ச்சையில் சிக்கிய ரோஜா; கேள்விகளால் துளைக்கும் சன்னி லியோன்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

 Controversial Rose; Sunny Leone is peppered with questions

 

ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா சன்னி லியோன் குறித்து மேடையில் பேசிய சம்பவம் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகளை சன்னிலியோன் ரோஜாவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக வைத்துள்ளார்.

 

ஆந்திராவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் 'வாராகி யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் ஒன்றை தொடங்கி பேசி வருகிறார்.

 

இந்நிலையில் அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரமான ரோஜா, 'பவன் கல்யாண் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் பொழுது சன்னி லியோன் ஒழுக்கத்தைப் பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது' என பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசியுள்ளார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை சன்னி லியோன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ரோஜா பேசிய அந்த வீடியோவை பதிவிட்டு 'தான் ஒரு ஆபாச நடிகை தான் என்றாலும் தனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப்போல் இல்லாமல் நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்வேன். உங்களால் வெளிப்படையாக உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை என்னைப்போல் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது சன்னி லியோனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.