Skip to main content

"என்னை அவர்களால் தொடமுடியாது" - ராகுல் காந்தி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனிவிமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

 

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசியது வருமாறு:

 

"இந்தியாவில் மக்களவை, சட்ட சபைகள், பஞ்சாயத்துகள், நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் உள்ளிட்ட நிறுவனங்கள், தேசத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் அனைத்திலும் தாக்குதலை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று உங்களுக்குச் சொல்ல வருத்தமாக இருக்கிறது. அது இறந்துவிட்டது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் எனும் அமைப்பு, நிறுவன சமநிலையில் ஊடுருவி தொந்தரவு செய்யவும் அழிக்கவும் பெரும் நிதியைக் கொண்டுள்ளது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து தேசத்தை உருவாக்குகின்றன. நாட்டின் நிறுவன சமநிலையை நீங்கள் அழிக்கும்போது, மாநிலங்களுக்கிடையிலான உடன்பாட்டையும் அழிக்கிறீர்கள். எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு இல்லை என்றால், அந்த மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலை அழிக்கப்படும். அது எந்த நாட்டிற்கும் கடுமையான பிரச்சினையாகும். இதைத்தான் நாம் எதிர்கொள்கிறோம். ராஜஸ்தானில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வீசப்பட்ட பணத்தின் அளவு எனக்குத் தெரியும்.

 

ஒருபுறம், நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் ஏகபோகத்தைக் கொண்டுள்ளீர்கள். மறுபுறம் கட்சிகளை உங்களோடு போட்டியிட அனுமதிப்பதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் அரசை அமைக்கும்போது அது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது எங்கே செல்கிறது? ஒரு அரசியல் தலைவராக, ஒரு ஜனநாயகத்தில், எனக்கு நிறுவன ஆதரவு, ஊடகம், தீவிரமான நீதித்துறை, பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியவை தேவை. அவை அனைத்தும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது எங்கே செல்கிறது? வெகுஜன நடவடிக்கை மூலம் இதைத் தீர்ப்பதற்கு ஒரே ஒருவழி இருக்கிறது. சாதாரண மக்கள், இந்த நாடு அவர்களது ஆணைப்படி அல்ல, பலவந்தத்தால் ஆளப்படுகிறது என அறியும்போது நடவடிக்கையில் இறங்குவார்கள். டெல்லி எல்லையில் அதன் தொடக்கத்தைக் காணலாம்.

 

தற்போது, இந்தியா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியது போன்ற ஒரு நிலைக்குள், நுழைகிறது. இந்த கட்டத்தில், ஜனநாயகத்தைக் காக்க நிறுவனங்களைச் சார்ந்திருக்க முடியாது. மக்களைத்தான் சார்ந்திருக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை கேள்வி கேட்கும், சவால் விடும் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னை அச்சுறுத்த அவர்களிடம் எதுவுமில்லை. ஏனென்றால் எனது முழு அரசியல் வாழ்க்கையிலும், ஒரு நேர்மையான நபராக இருக்க எனக்கு நல்ல புத்தி இருந்தது. அதனால், அவர்களால் என்னைத் தொட முடியாது. அதனால்தான் நான் உங்களிடம் பேச முடியும், ஏனெனில் எந்த அமலாக்கத்துறையும், சிபிஐயும் என்னை பாதிக்காது. அதனால்தான் பாஜக என்னை 24*7 தாக்குகிறது. ஏனென்றால் இந்த மனிதன் ஊழலற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். சி.ஏ.ஏ. பாரபட்சமானது என்று நாங்கள் கருதுகிறோம், நாங்கள் அதை ஏற்கவில்லை, நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. இந்த நாட்டில் மதச்சார்பின்மை மீது முழு அளவிலான தாக்குதல் உள்ளது, ஆர்.எஸ்.எஸ் & பாஜக அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குகின்றன. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாகும், எனவே இது நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான தாக்குதலாகும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.