வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

அதன்படி, நேற்று காலை மற்றும் மதிய உணவை நளினி தவிர்த்துள்ளார். மேலும் டீ, காபி போன்ற எதையும் சாப்பிடாமல் தனது அறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தகவல் அறிந்த சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், தனது கணவரின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி நளினி உண்ணாவிரதம் இருக்க போவதாக வாய்மொழியாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் முறையான கடிதம் அளிக்கவில்லை என்றனர்.