Skip to main content

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி; திரண்டுவந்த பொதுமக்கள்!

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Minister Udayanidhi who provided welfare assistance; Crowds of people!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி வருகை தந்துள்ளார். மேலும், அவர் நேற்று (ஜூலை 17 ஆம் தேதி) அந்த மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

 

நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான தேவராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

ஜோலார்பேட்டை அருகேயுள்ள மண்டலவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 74 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். 

 

உதயநிதி நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர், அவர்களுக்கான உணவு உட்பட பல ஏற்பாடுகளை  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்