Skip to main content

ஐந்து வருடங்களாக அவதி; மாணவர்களுக்காக ஒன்றிணைந்த பாஜக - காங்கிரஸ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Kumari District Pathmanabapuram School issue

 

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

 

இதில் தொடக்கப் பள்ளியில் 97 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடக்கப்பள்ளி கட்டிடம் 2017-ல் ஒக்கி புயலால் சேதமடைந்தது. ஆனால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதே கட்டிடத்தில் வகுப்புகளை நடத்தி வந்தனர். மேலும், அந்தக் கட்டடத்தில் மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை எனப் பெற்றோர்கள் பிரச்சனை எழுப்பியதால் கடந்த மார்ச் மாதம் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு அருகில் இருந்த இன்னொரு கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வந்தன.

 

Kumari District Pathmanabapuram School issue

 

இந்த நிலையில், அந்தக் கட்டிடமும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதோடு மழை நீர் வகுப்பு அறையில் வழிகிறது. அதுபோல் கழிவறைகளும் இடிந்து கிடப்பதால் மாணவிகள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இது தொடர்பாக பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழுவும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த பாஜக மற்றும் காங்கிரசார் மாணவர்களுக்கு ஆதரவாக சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் கையில் பதாகையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து அங்கு வந்த பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக் கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.65 லட்சம் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கட்டிடங்கள் கட்டுவதாகவும், தற்போது வகுப்புகள் நடைபெறுவதற்கு தற்காலிக வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.